Friday, January 24, 2014

திருவெண்காட்டில் உறையும் சித்திவிநாயகரை வழிபட வாழ்வு மிகுந்து வரும் ! ! !


விநாயகர் மிக எளிமையானவர். அவரது வழிபாடும் எளிமையானது. ஆனால் ஆழ்ந்த பொருள் கொண்டது.


விநாயகருக்கு கொழுக்கட்டை படைக்கிறோம். மேலே மாவு மூடியிருக்க, உள்ளே வெல்லமும் தேங்காயும் கலந்த பூரணம் இருக்கும். இதன் பொருள் என்ன? மாவுதான் மாயை- அதாவது ஆசை முதலான உலகப்பற்றுகள். அந்த மாயையை விலக்கினால் உள்ளே இருப்பது பூரணம் என்னும் ஆனந்தம்.

Monday, January 20, 2014

திருவெண்காட்டில் பஞ்சதள இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 20/01/2014 (படங்கள்)


திருவெண்காட்டில் பஞ்சதள இராஜகோபுர கட்டுமான பணிகளில் கருங்கல்லிலான கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன மேலும் படங்கள் இணைப்பு....

Friday, January 17, 2014

கூரிய மதியும் சீரிய நிதியும் பெற திருவெண்காடனை சிரத்தில் குட்டி வணங்குவோம் !!!


முனிவர்களுள் முதல்வராகிய  அகத்திய முனிவர் சிவபெருமானிடம் இருந்த காவிரி நதியைக்கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு தென்திசை நோக்கி வரவாரய் குடகு மலையில் சிவபூசை செய்து கொண்டு இருந்தர். அப்போது இந்திரன் சீர்காழியில பூசை செய்து கொண்டிருந்தான் மழையின்றி நந்தவனம் வாடியது.

Thursday, January 16, 2014

திருவெண்காட்டில் தைப்பூசத் திருநாள் . . . 17.01.2014





தைப்பூசத்தின் சிறப்புகள்

முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன் சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும். தைப்பூச நாளின் சிறப்புகள் பற்றிப் பார்ப்போம். தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. 

Wednesday, January 15, 2014

நன்மைகள் தரும் நான்கு வகை கணபதியாக திருவெண்காட்டில் உறையும் சித்தி விநாயகர்

அனைவருக்கும் பிடித்த கடவுள் விநாயகர் என்றால் அது மிகையில்லை. வித்தியாசமான உருவம் கொண்ட இவரை வணங்கினால் 16 வகையான செல்வங்களும் (பொருட்கள்) பெற்று சிறப்பாக வாழலாம் என்பது ஐதீகம். இதனால்தான் புராணத்தில் 16 வகையான விநாயகர் பற்றி சொல்லப்பட்டுள்ளது. 

Monday, January 13, 2014

திருவெண்காட்டில் தைப்பொங்கல் திருநாள் . . . 14.01.2014

இந்துக்களின் வாழ்வில் இறையின் அடையாளமாக ஞாயிற்றைப் போற்றுகின்றனர். எனவே இறை வழிபாடும், இயற்கை வழிபாடும் ஒன்றிணைந்து தைப்பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடப்பெற்று வருகிறது.

உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் (சூரியன், மழை) மற்ற உயிர்களுக்கும் (கால் நடை) நன்றி சொல்லும் ஒரு நன்றியறிதலான விழாவாக கொண்டாடப்படும் இத் தைப்பொங்கல் விழா சமயங்கள் கடந்து  பொதுவாக அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது. 


Sunday, January 12, 2014

அடியவர்களின் வினைகளை தீர்க்கும் விநாயகரின் வரலாறு...

படைப்புக் கடவுள் ஆன பிரம்மா தன் படைப்புக்களில் பெருமிதம் கொண்டு, தன்னாலேயே அனைத்தும் நடக்கின்றன என்று ஆணவம் கொண்டார். இந்த ஆணவத்தோடு அவர் படைத்த படைப்புக்கள் பின்னமாகிக் கொண்டு வந்தன. தொடர்ந்து இம்மாதிரிப் பின்னமான படைப்புக்கள் ஏற்படவே பயந்து போனார் பிரம்மா. தன்மேல் என்ன தவறு என யோசித்த போது, அவர் மனதில் தோன்றியது விநாயகருக்கு வழிபாடு செய்வதை நிறுத்தியது தவறு என உணர்ந்தார். 

Friday, January 10, 2014

பெயர்கள் பல பெற்ற பிள்ளையார்






உலகம் முழுவதும் எல்லா இடங்களிலும் நிறைந்து நிற்கும் விநாயகப் பெருமானுக்குப் பொதுவாக ஆனை முகத்தோன், கரிமுகத்தோன், வேழமுகன், ஐங்கரன், தும்பிக்கையான், கணேசன், விக்னேஸ்வரன் என்று பல பெயர்கள் உண்டு. இருந்தாலும், அவரது செயல்களுக்கும் இடத்துக்கும் ஏற்றாற் போல, பல ஊர்களில் உள்ள சிறிய பெரிய திருக்கோவில்களில் விதம் விதமான பெயர்களுடன் விளங்கி வருகிறார். அவற்றை இங்கு காண்போம்.