Saturday, July 30, 2016

திருவெண்காட்டில் திருக்குடமுழுக்கு நெருங்கிவரும் நிலையில் திருப்பணி வேலைகள் துரித கெதியில் படங்கள் விபரங்கள் இணைப்பு 30.07.2016


சித்திவிநாயகப் பெருமான் மெய்யடியார்களே !

வெகுவிரைவில் (04.09.2016) திருவெண்காட்டு பெருமானுக்கு திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதனால் திருப்பணி வேலைகள் துரித கெதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 

எனவே எங்கள் மண்டைதீவு பிள்ளையாருக்கு, எங்கள் சித்திவிநாயகருக்கு, எங்கள் வெண்காட்டு பெருமானுக்கு, எங்கள் குலதெய்வத்திற்கு, எங்கள் இஷ்ர தெய்வத்திற்கு, நாங்கள் எதாவது பொருள் உதவி செய்யவேண்டும் நிதி உதவி செய்யவேண்டும் என மனதார நினைத்து கொண்டிருக்கும் எம் பெருமான் மெய்யடியார்கள் விரைந்து இணைந்து சித்தி விநாயகப் பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகும் வண்ணம் வேண்டுகின்றோம் .

Friday, July 29, 2016

திருவெண்காட்டில் இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்கு பிரதோஷ வழிபாடு 31.07.2016


பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

Friday, July 22, 2016

திருவெண்காட்டில் அளவு கடந்த ஆனந்தத்தை தரவல்ல சங்கடஹர சதுர்த்தி விரதம் ! ! ! 23.07.2016


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

Saturday, July 16, 2016

திருவெண்காட்டில் சகல தோஷங்களும் நீக்கும் மஹா பிரதோச வழிபாடு ! ! ! 17.07.2016


சிவபெருமானை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை, அதிலும் சிறந்தது சோமவாரம், அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி, அதனினும் சிறந்தது பிரதோஷம், பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். நோய் தீரவும், ஏழ்மை ஒழியவும், துயரங்கள் விலகவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.

Friday, July 15, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் ஐஸ்வரியங்கள் தரவல்ல ஆடிப்பிறப்பு ! ! ! 16.07.2016


ஆடிமாதத்தின் ஆரம்பநாள், ஆடி முதல்நாள் – ஆடிப் பிறப்பு. இந்த ஆண்டு, இன்று சனிக்கிழமை ஜூலை 16 ஆம் திகதி பிறக்கிறது ஆடி.
ஒவ்வொரு மாதமும் தான் மாதம் பிறக்கிறது, முதல் திகதி வருகிறது. அவை எல்லாவற்றையும் மாதப்பிறப்பென்று நாம் கொண்டாடுவதில்லையே. மாதப்பிறப்பில் ஒருசிலர், மிகச்சிலர் விரதம் இருப்பார்கள் அவ்வளவுதான்.
ஆனால் ஆடிமாதப்பிறப்பை நாம் ஏன் சிறப்பாகக் கொண்டாடுகிறோம், சிறப்பாகக் கொண்டாடுவதற்குக் காரணம் தான் என்ன?

Friday, July 8, 2016

‪திருவெண்காட்டில் ஆனந்த ‪தாண்டவ தெய்வத்திற்கு ‪ ஆனித்திருமஞ்சன பெருவிழா‬ ! ! ! 10.07.2016


ருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் மட்டும் காணும் ஆடலரசனான ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆடிய அற்புதத் தாண்டவங்களில் 108 தாண்ட வங்கள் மிகவும் போற்றப்படுகின்றன. ஒவ்வொரு தாண்டவத்திற்கும் புராண வரலாறு உண்டு. அந்த வகையில் சில திருத்தலங்களில் ஆடிய தாண்டவங்கள் மிகவும் சிறப்பிக்கப்படுகின்றன.

Wednesday, July 6, 2016

திருவெண்காட்டில் சிறந்த கல்வி அறிவும் தெளிந்த ஞானமும் பெற சதுர்த்தி விரத வழிபாடு ! ! ! 07.07.2016


விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து உள்ளத்தையும், உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும்.

Saturday, July 2, 2016

திருவெண்காட்டில் திருப்பணி வேலைகள் துரித கெதியில் படங்கள் விபரங்கள் இணைப்பு 02.07.2016


சித்திவிநாயகப் பெருமான் மெய்யடியார்களே !

வெகுவிரைவில் (04.09.2016) திருவெண்காட்டு பெருமானுக்கு திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதனால் திருப்பணி வேலைகள் துரித கெதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 

சித்திவிநாயகப்பெருமான் மீது அளவில்லாத பக்தியும் அன்பும் காதலும் கொண்ட மெய்யடியார்கள் இப்பெருங்கைங்கரியத்தில் உங்கள் ஒவ்வொருவருடைய உழைப்பும்  சேரவேண்டும் என விரும்புவோர் விரைந்து இணைந்து சித்தி விநாயகப் பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகும் வண்ணம் வேண்டுகின்றோம் .

Friday, July 1, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் சங்கடங்கள் தீர்க்கும் சனி மஹா பிரதோஷ வழிபாடு ! ! ! 02.07.2016


சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய சனி பிரதோஷங்கள் சனி மஹாப்பிரதோஷங்கள் என்று வழங்கப்படுகின்றன.