Monday, October 31, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் கந்தன் கருணை புரியும் கந்தசஷ்டி விரதம் ! ! ! 31.10.2016 - 05.11.2016


எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.

குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

Friday, October 28, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் சகல சௌபாக்கியங்களும் தரவல்ல தீபாவளி வழிபாடு ! ! ! 29.10.2016


தீபம்’ என்றால் ஒளி விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி,  இருள் நீக்கி,  ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். 

தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாக ஐதீகம்.

இந்த தீபாவளி திருநாளில் நமக்கு கிடைக்க முதற்காரணம் நரகாசுரன் தான். நரகாசுரன் மரணம் அடையும் தருவாயில் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் தான் மரணம் அடையும் இந்நாளில் எல்லோரும் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இந்த நாள் தான் தீபாவளி…

Wednesday, October 26, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் மகத்துவம் நிறைந்த பிரதோஷ வழிபாடு ! ! ! 27.10.2016



பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம். 

Tuesday, October 18, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் சங்கடங்கள் தீர்க்கும் சங்கடகர சதர்த்தி ! ! ! 19.10.2016


விநாயகர் தோத்திரங்களை மனமுருக பாடி விநாயகரை நெஞ்சில் நிறுத்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானை வழிபடுவோரை சனி பிடிப்பதில்லை! விக்கினங்கள் அகலும்! வேதனைகள் மறையும்! சங்கடஹர சதுர்த்தி நாளில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகரை வழிபட்டு அருள் பெறுவோமாக!

Friday, October 14, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் அம்பலத்தாடுவானுக்கு புரட்டாதி மாத சதுர்த்தசி திருநீராடல் - 14.10.2016

னைத்து சிவாயலங்களிலும் எழுந்தருளியுள்ள ஆனந்த மூர்த்திக்கு ஆவணி சதுர்த்தசி திருநீராட்டல் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துக் கொண்டு அம்பலக் கூத்தனின் அருளினை பெறுவோம். சகல புவனங்களையும் ஆட்டுவிக்கும் ஆனந்த கூத்தனின் அருள் அபிஷேகம் கண்டு நன்மையடைவோமாக.

Wednesday, October 12, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் சிவனருளை பரிபூரணமகாப் பெற உகந்த கேதாரகௌரி விரத வழிபாடு 10.10.2016 - 30.10.201

சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதாரகௌரி விரதமும் ஒன்று. ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ச தசமியில் இவ்விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. கேதார கௌரி விரதம் அம்மை கௌரியே அனுஷ்டித்த விரதம். இவ்விரத்தத்தினைப் பொதுவாக பெண்களே அனுட்டிப்பர். கன்னியர்கள் நல்ல கணவன் வேண்டியும் சுமங்கலிகள் தம் கணவருடன் இணைபிரியாது இருக்கவும் இவ்விரத்தத்தினை அனுட்டிப்பதுண்டு.

Monday, October 10, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வெற்றி தரும் விஐய தசமி ! ! ! 10.10.2016


"கலையாத கல்வியும், குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும
குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும், கோணாத கோலும்
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும், துய்ய
நின்பாதத்தில் அன்பும், உதவிப் பெரிய தொண்டரொடு
கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலும்
மாயனது தங்கையே ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாய்...! அபிராமியே..!!"

Monday, October 3, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் சிறந்த கல்வி அறிவும் தெளிந்த ஞானமும் பெற விநாயகர் சதுர்த்தி விரத வழிபாடு ! ! ! 04.10.2016



திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம்கை.

Saturday, October 1, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் அஷ்ட ஐஸ்வரியமும் சகல ஞானமும் தரவல்ல நவராத்திர விரத வழிபாடு 01.10.2016 - 10.10.2016


முப்பெரும் தேவிகளின் அருளை வேண்டி இந்துக்களால் முறைப்படி விரதமிருந்து அனுஷ்ட்டிக்கப்படுகின்ற நவராத்திரி விரதம் இன்று ஆரம்பமாவதுடன் ஒன்பது நாட்கள் விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இவ்வாண்டு (துர்முகி வருடம்) புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமை இன்று தொடங்குகிறது. நவமி 10ம் தேதி முன்னிரவில் முடிவடைகிறது.