Friday, December 27, 2019

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான விநாயகர் பெருங்கதை விரத சிறப்பு பதிவு . ! ! !


விநாயகரிடம் ஔவையார் என்ன கேட்டார் .. ?

ஔவையார் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தலைச்சிறந்த புலவர் ஆவார். செழுமையான தமிழ்மொழியும், செங்கோல் மன்னர்களின் நல்லாட்சியும் நிலவியிருந்த பொற்காலம். பக்திக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர், ஔவையார். அவர் விநாயகப் பெருமானிடம் மனமுருகி பாடுகிறார்.

“பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம்செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.”

Wednesday, December 18, 2019

`வினைகள் அகற்றும் திருவெண்காடு சித்தி விநாயகர்' பெருங்கதை விரத சிறப்பு கட்டுரை ! ! !


`முழுமுதற் கடவுள்’ என்று போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். இவருக்குப் பிள்ளையார் என்றும் பெயர். இந்த உலகின் ஜகன்மாதா பார்வதி தேவிக்கும் ஆதியும் அந்தமும் இல்லாத அநாதியான பெருமான் சிவபெருமானுக்கும் பிள்ளை. முதற்பிள்ளை என்பதால் ஆர் என்னும் மரியாதை விகுதி சேர்த்து பிள்ளையார் என்று வழங்கும் வழக்கம் ஏற்பட்டது.