Monday, March 28, 2016

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 28.03.2016 (படங்கள் இணைப்பு)


வெகுவிரைவில் (04.09.2016) திருவெண்காட்டு பெருமானுக்கு குடமுழுக்கு நடைபெற இருப்பதனால் பஞ்ச தள இராஐகோபுரத்திற்கு பொம்மைகள் அமைக்கும் பணிகள்  துரித கெதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எனவே இப்பெருங் கைங்கரியத்தில் உங்கள் ஒவ்வொருடைய உழைப்பும் சேரவேண்டும் என விரும்பும் சித்திவிநாயகப்பெருமான் மெய்யடியார்கள் குடமுழுக்கு நடைபெறுவதற்கு முன்பு ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு  உங்களது பங்களிப்பினை மேற்க்கொண்டு  எம்பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகி பேரானந்த பெருவாழ்வு வார்வீர்களாக . .

படங்கள் : - நயினை - வ.க.வாகீசன்.

Saturday, March 26, 2016

திருவெண்காட்டில் நிலையான சந்தோஷத்தை தரவல்ல சங்கடஹர சதுர்த்தி ! ! ! 27.03.2016


ங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.

Tuesday, March 22, 2016

திருவெண்காட்டில் மகிமைகள் நிறைந்த பங்குனி உத்திரம் ! ! ! 23.03.2016

ங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும். திருமணமாகாத இரு பாலாரும் இந்நாளில் விரதமிருந்து வழிபடின் திருமணப்பேறு கிட்டும். புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள் பற்றி விவரிக்கப்படுகின்றது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு.

Monday, March 21, 2016

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 21.03.2016 (படங்கள் இணைப்பு)


சித்திவிநாயகப் பெருமான் மெய்யடியார்களே !

திர் வரும் புரட்டாதிமாதம் (04.09.2016) அன்று  எம் பெருமானுக்கு குடமுழுக்கு  நடைபெற இருப்பதனால் ஆலய திருப்பணிவேலைகளும், புதிதாக நிர்மானிக்கப்படும் பஞ்சதள இராஐகோபுர திருப்பணிகளும்  சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

எங்கள் மண்டைதீவு பிள்ளையாருக்கு, எங்கள் சித்திவிநாயகருக்கு, எங்கள் வெண்காட்டு பெருமானுக்கு, எங்கள் குலதெய்வத்திற்கு, எங்கள் இஷ்ர தெய்வத்திற்கு, நாங்கள் எதாவது பொருள் உதவி செய்யவேண்டும் நிதி உதவி செய்யவேண்டும் என மனதார நினைத்து கொண்டிருக்கும் எம் பெருமான் மெய்யடியார்கள் விரைந்து இணைந்து செயற்படுமாறு சித்திவிநாயகப் பெருமானின் பாதரவிந்தம் பணிந்து வேண்டுகின்றோம்.
 
படங்கள்: - லக்கீஸன் - திருவெண்காடு மண்டைதீவு.

Saturday, March 19, 2016

திருவெண்காட்டில் உலகை காத்த உத்தமனுக்கு பிரதோஷ வழிபாடு ! ! ! 20.03.2016



பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. 

சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். 

மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். 

இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.

Thursday, March 17, 2016

திருவெண்காட்டில் குடமுழுக்கு ! ! ! 04.09.2016


லங்கை யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய சேஸ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானுக்கு பன்னிரண்டு ஆண்டுக்கொருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேக பெருஞ் சாந்தி விழா இம் முறை புதிதாக நிர்மானிக்கப்பட்ட பஞ்சதள இராஐகோபுரத்துடன் எதிர் வரும் மங்களகரமான துர்முகி வருடம் ஆவணித்திங்கள் 19ம் நாள் (04.09.2016) ஞாயிற்றுக் கிழமை  அத்த நட்சத்திரமும் கன்னி லக்கினமும் கூடிய சுபயோக சுபதினத்தல் காலை 7:04 மேல் 8:58 மணிக்கும் இடையில் வெண்காட்டுப்பெருமானுக்கும் ஸ்ரீ சிவகாமிசுந்தரி சமேத ஆனந்த நடராஐமுர்த்திக்கும் ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை சமேத காசி விஸ்வநாதமூர்த்திக்கும் ஏனைய பரிவாரமூர்த்திகளுக்கும் பஞ்சதள இராஐகோபுரத்துக்கும் குடமுழுக்கு வைபவம் நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.