Friday, January 24, 2020

மண்டைதீவு திருவெண்காட்டில் மார்கழி திருவாதிரை ஆருத்திரா தரிசனம் ! ! ! 10.01.2020 படங்கள் இணைப்பு


மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான  பொற்சபை பொன்னம்பலத்தில் வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 10.01.2020 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.

Wednesday, January 15, 2020

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் விண்ணுக்கும் மண்ணுக்கும் நன்றி செலுத்தும் தைப்பொங்கல் திருநாள் ! ! ! 15.01.2020


மிழ் மக்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் மிகச் சிறந்து விளங்குவது தைப்பொங்கற் பண்டிகையாகும். பண்டிகைகள் ஒரு இனத்தின் கலாச்சார மேம்பாட்டைப் புலப்படுத்துவன. அவற்றைப் பேணிக் காப்பன என்றும் கூறலாம். அவற்றில் ஒரு சமுக நோக்கு இருப்பதையும் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

பொங்கற் பண்டிகை உழவர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது. அறுவடைத் திருநாள் என்றும் இதனைக் கூறுவர். உழைப்பின் உயர்வை எடுத்துக் கூறும் திருநாளாகவும் இது விளங்குகிறது.

Friday, January 10, 2020

திருவெண்காட்டில் திருநடனம் புரியும் பொன்னம்பலவாணரின் ஆருத்திரா தரிசனம் ! ! ! 10.01.2020


திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்து தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது.

மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று (திருவாதிரை தரிசனம்) காட்சி தரும் கடவுளை கண்டு களித்தால் வீழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும். திருவாதிரை தரிசனத்தை, ஆருத்ரா தரிசனம் என்றும் கூறுவார்கள். அன்றைய தினம் சகல சிவாலயங்களிலும் நடராஜருக்கு அபிஷேகம் செய்வதும், ரிஷப வாகனத்தில்

திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்து தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழி திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை கொண்டுதான் சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும், ஆதிரையான் என்றும் கூறுவர்.

Thursday, January 2, 2020

திருவெண்காட்டில் திருநடனம் புரியும் இரத்தினசபாபதிக்கு திருவெம்பாவை நோன்பு ! ! ! 2020


ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

மாணிக்கவாசகர் பற்றிய சிறு குறிப்பு:

காலம் பற்றிய பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் சைவப்பெரியோர்கள் பலரும் இவர் அப்பர், சுந்தரர், ஞாநசம்பந்தர் மூவருக்கும் மூத்தவர் என அறுதியிட்டுச் சொல்கின்றனர். பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்த இவர் அந்த ஊரின் பெயராலேயே வாதவூரார் எனவும் அழைக்கப் பட்டார். அமாத்ய பிராமணர் வகுப்பில் பிறந்த இவர் இளம் வயதிலேயே அனைத்துக் கலைகள், மொழியில் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார். அமாத்யர் என்பது அமைச்சர் என்பது வடமொழிச் சொல்லாகும். இந்தக் குலத்தில் பிறந்தவர்கள் அமைச்சர்களாக இருந்து வந்தார்கள். அதை ஒட்டி இவரும் அரிமர்த்தன பாண்டியனின் அவையில் முதல் அமைச்சராக இருந்தார். இவரைத் தென்னவன் பிரமராயன் என்ற சிறப்புப் பெயரால் அலங்கரித்தான்.