![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJH-BEgCfkpwDUCzYAeQDyo7-YuA4ieon_mbFs9oNgrkGDoInDSqMFJEdmVbZmcLZ7ive5dbTFsepH4XkhVwYjnueipBCdFW5I-CfVl8eyk4AKq2RZ-yNAW4IPh9H5xHBqd2KOphN1430/s1600/jaffna.jpg)
"ஓம்" எனும் பிரணவ மந்திரம் எல்லாவற்றுக்கும் மூலமாக அமைந்துள்ளது. ‘ஓம்’ எனும் வடிவமாகவும், பிரணவ பொருளாகவும் விநாயகர் விளங்குகிறார்.
"விநாயகர்" என்றால் "தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்" என்று பொருள். விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். கணங்களின் தலைவரான கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு, வருகின்ற விக்கினங்கள், வில்லங்கங்கள், இடர்கள், இடையூறுகள் அனைத்தும் விலகி ஓடும். எனவே தான் அன்று தொட்டு இன்றுவரை அனைவரும் விநாயகர் பூஜையை முதலில் கொண்டாடி வருகிறோம்.