Thursday, May 31, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் விக்கினங்களை அகற்றி ஆன்மிக வெற்றியை தரவல்ல சங்கடஹர சதுர்த்தி ! ! ! 01.06.2018


"ஓம்" எனும் பிரணவ மந்திரம் எல்லாவற்றுக்கும் மூலமாக அமைந்துள்ளது. ‘ஓம்’ எனும் வடிவமாகவும், பிரணவ பொருளாகவும் விநாயகர் விளங்குகிறார். 

"விநாயகர்" என்றால் "தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்" என்று பொருள். விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். கணங்களின் தலைவரான கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு, வருகின்ற விக்கினங்கள், வில்லங்கங்கள், இடர்கள், இடையூறுகள் அனைத்தும் விலகி ஓடும். எனவே தான் அன்று தொட்டு இன்றுவரை அனைவரும் விநாயகர் பூஜையை முதலில் கொண்டாடி வருகிறோம்.

Wednesday, May 30, 2018

ஈழமணி திருநாட்டில் கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள் ! ! !

துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் எந்த ஆலயத்திற்குச் சென்றால், என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்பதை சிறிய அளவில் இங்கே பார்க்கலாம்.

மனித வாழ்வு என்பதே இன்பமும், துன்பமும் நிறைந்தது தான். ஆனால் துன்பம் வரும்போதுதான் மனிதர்களில் பலரும் இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை. 

Monday, May 28, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் திருமண வரம் அருளும் வைகாசி திருநாள் ! ! ! 28.05.2018


வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். இத்திருநாளில் திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

28-5-2018 வைகாசி விசாகம்

வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் ‘வைசாக' மாதம் என்றிருந்து, பின்னாளில் ‘வைகாசி’ என்றானதாக சொல்லப்படுகிறது. இந்த மாத பவுர்ணமி நாளை ‘வைகாசி விசாகம்’ என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Friday, May 25, 2018

மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் சகல சௌபாக்கியங்களும் தரவல்ல பிரதோஷ வழிபாடு ! ! ! 26.05.2018


சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். 

மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை,தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். 

இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.

Saturday, May 12, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் சகல வினைகள் யாவும் போக்கும் சனி பிரதோஷம் ! ! ! 12.05.2018


சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் வழிபாடும் செய்வது பல கோடி புண்ணியத்தை தரவல்லது. 20 வகையான பிரதோஷ விரதங்கள் இருக்கின்றன.

சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் வழிபாடும் செய்வது பல கோடி புண்ணியத்தை தரவல்லது. 20 வகையான பிரதோஷ விரதங்கள் இருக்கின்றன.

Thursday, May 3, 2018

மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி விரதம் ! ! ! 03.05.2018

விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை "வர சதுர்த்தி'என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி' என்றும் கூறுவார்கள். சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.