![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb-hWhdzI2rejdZ9MByqQ65fL5I8pJHbjCKfCKCbqPtifkGJ46k-FXIeufkX1gXFjgRdvbWz-MoRj8cP0_UJInwqS4HhNSlsvAGx9n9MGX_2EWrB70_o5UlXYbpZw8TY1hqXwhcB8B_GHc/s1600/01.jpg)
ஔவையார் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தலைச்சிறந்த புலவர் ஆவார். செழுமையான தமிழ்மொழியும், செங்கோல் மன்னர்களின் நல்லாட்சியும் நிலவியிருந்த பொற்காலம். பக்திக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர், ஔவையார். அவர் விநாயகப் பெருமானிடம் மனமுருகி பாடுகிறார்.
“பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோலம்செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே!
நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.”