![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCHMms0XXjjT2niEV_5XipKVbw3VmFWxMASiZIz8mZAqnZFP55eRTHOZvAuLYx6_YwIKg6xjGsvNzw-o5w5WrucUy2FQi3MLsFnP1X2scQ6rlBMuzoWrpAcpcsvSHnN3qxV05_cLroT0c/s1600/0124.jpg)
அருள் வடிவானது இறை, அன்பின் திருஉருவம் இறை, சிந்திக்குந்தோறும் தெவிட்டாத அமுது இறை. இந்த இறையை ஏத்தி வழிபடுவதுதான் மானிடப் பிறவியின் உயர்வு ஏற்றம் எல்லாம். அதுவும், மகளிர் வழிபாடே தனி. இறையை சக்தியாகப் பார்க்கின்ற பொழுது தமக்கும் அதற்கும் ஒரு தொடர்பு உண்டு என்பதை மகளிர் உணர்கின்றார்கள். இந்த உணர்ச்சியின் அடிப்படையில் எழுந்த ஒளிக்கதிர்தான் திருவெம்பாவை.