![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6UMZ60OjCeKvQj-oUBMNR36Ftq8FWCnDrG37PF9BHwcvgZRU9v60jYu8MUNxM_dZQiZVcqzB2UG83nSTl31jtHAUKwNVa_5ZANmcNv8B4xd7e8L8G4IKOPY33qcu1FsxdS481zYiLfn0/s1600/02.jpg)
முன்னோர் வழிபாடு, பன்னெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு முறையாகும். நாம் வணங்கி வழிபடும் தெய்வத்தை பார்க்க முடிவதில்லை. ஆனால் நம்மை பெற்றவர்களையும் அவர்களைப் பெற்ற நமது தாத்தா-பாட்டிகளான முன்னோர்களையும் பார்த்திருப்போம். இப்படி உறவாலும் உதிரத்தாலும் நம்மோடு சம்பந்தப்பட்ட, அவர்களது அனுபவங்களை ஆதாரமாகக் கொண்டு வாழ்வதற்கு நன்றி கூறுவதே முன்னோர் வழிபாடாகும். இந்த வழிபாட்டுக்குரிய நாளே, அமாவாசை.