Tuesday, December 29, 2020

மண்டைதீவு திருவெண்காட்டில் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் ஜோதியனின் ஆருத்திரா தரிசனம் - 30.12.2020

மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 30.12.2020 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுப்பார்கள்.

Sunday, December 20, 2020

மண்டைதீவு திருவெண்காட்டில் மார்கழி திருவாதிரை ஆருத்திரா தரிசனம் 21.12.2020 சிறப்பு கட்டுரை



மார்கழி மாதத்தின் சிறப்பு

ஐயன் ஆருத்ரா தரிசனம் தந்தருளும் நாள் மார்கழித் திருவாதிரை. மார்கழி மாதத்தின் சிறப்புகளை முதலில் காண்போம். நமது மனித நாளில் காலை 4 மணி முதல் 6 மணிவரையான காலம் பிரம்ம முகூர்த்தம் என்றழைக்கப்படுகின்றது. சூரிய உதயத்திற்கு முந்தைய இந்தக் காலம் இறைவனை வணங்குவதற்கும், யோக சித்திக்கும் உகந்த நேரம் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் அதிகாலை துயிலெழுவதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வலியுறுத்தினர். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தேவர்களுடைய சூரிய உதயமான உத்தராயண காலம் தை மாதம் ஆகும் .. தேவர்களின் பிரம்ம மூர்த்தமான காலமே மார்கழி மாதம் ஆகும்.. தேவர்கள் செய்யும் ஆறு கால பூஜையின் உதய கால பூஜையே திருவாதிரை பூஜையாகும்.

Monday, December 14, 2020

மண்டைதீவு திருவெண்காட்டில் பிள்ளையார் பெருங்கதை விரத 15ம் நாள் சிறப்பு பதிவு 15.12.2020


 பிள்ளையாருக்கு மோதகத்தை படைத்து வழிபடுவர். அதற்கு ஒரு தத்துவ விளக்கம் சொல்வர்.

மோதகம் வெளியே மாவினாலும், உள்ளே சர்க்கரை, பயறு, தேங்காய் துருவல் கலந்த பூரணத்தினாலும் ஆனது.
இங்கு சர்க்கரை, பயறு, தேங்காய் துருவல் என்பன மனம், வாக்கு, காயம் என்பவற்றிக்கு உவமையாக்கப்பட்டு, மாவை உடலுக்கும், பூரணத்தை உயிருக்கும் ஒப்பிடுவர்.

Thursday, December 10, 2020

மண்டைதீவு திருவெண்காட்டில் பிள்ளையார் பெருங்கதை விரத 10 ம் நாள் சிறப்பு பதிவு - 2020


 
புண்ணியம் கோடி வரும்
பொய் வாழ்க்கை ஓடிவிடும்
எண்ணியது கைகூடும்
ஏற்றதுணை--நண்ணிடவே
வாழ்வில் வளர்ஒளியாம்
வள்ளல் திருவெண்காடு சித்தி விநாயகனை
நாளெல்லாம் வாழ்த்திடுவோம்

ஓம் கம் கணபதயே நமஹ...!!
அன்பே சிவம்