![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjE79q63jxVQxQmwVZ3GyZXe5k6LLqTDkB2wTW8tttKr9as92tb9v_3ImphTr-aN44Z9i6CcEg52Z_Dm1HRnjPyfqGJlrOVmV_9TwFsrdEZ6Z3ePwczdmb9_Kwy4spHLod60OJMxA0kNXI/s1600/01.jpg)
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை வைத்து அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.