![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGVHx9XVTF7Cozybvc4d8nqCdr0z3hL7v_dJfQnmgGlYg49Q2dDiQKbqJlS5q0H7zqlruwUJOK4GAT9jRmkLmdWnkVCvbbthf7I80gPhHjju9wFOa1zPeS7p3xITeIVGd9onWmk_I9ZNE/s1600/101.jpg)
பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோச காலமென்பது மாலை 4 மணி முதல் 6 மணி வரையான காலமாகும்.
காலையில் எழுந்து நீராடிவிட்டு, சிவன் படத்திற்கு அகல் விளக்கு ஏற்றவேண்டும். சமயலறையில் இருக்கும் அடுப்பில் அரிசி மாவில் கோலம் இடவேண்டும். காலையில் இருந்து உணவை தவிர்க்க வேண்டும். பால் உணவும்(டீ,காபி) சாப்பிடகூடாது. பழங்கள், இளநீர் சாப்பிடலாம். சைவ உணவுகளை சமைத்துவிட்டு மாலையில் அருகில் இருக்கும் சிவ தலத்தில் நந்திதேவரையும், சிவனையும் வழிபடவேண்டும்.
நம் இல்லத்தில் சாமி படங்களுக்கு சாம்பிராணி போட்டுவிட்டு, மூன்று தலைவாழை இலையில் உணவு பறிமாறி, சிறிது உணவை காகத்திற்கு வைத்துவிட்டு, இரு இலை உணவை இல்லாத்தாளும், இல்லரசனும் சாப்பிடவேண்டும், ஒரு இலை உணவை ஏழைகளுக்கோ, சந்நியாசிகளுக்கோ கொடுக்கலாம்.
இந்த விரதம் கடைபிடிப்பதால் திருமணதடை அகலும்,குழந்தை பேறு கிடைக்கும். சகல செல்வங்களுடன் நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.
"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"
"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
சிவன் அருள் பெறுவோமாக " !!
ஓம் கம் கணபதயே நமஹ...!!
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
இன்பமே சூழ்க ... !
எல்லோரும் வாழ்க . . . !
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
அன்பே சிவம்
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'