Friday, August 6, 2021

முவுலகும் போற்றி வணங்கும் முழுமுதற் கடவுள் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகன் தேவஸ்தான ‘பிலவ’ வருட மகோற்சவ சிறப்பிதழ் - 2021


உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளான சித்திவிநாயகப் பெருமான் தம்மை நினைத்து உள்ளமுருகி வணங்கி வாழும் அடியார்களுக்கு அருள்பாலிக்கும் புண்ணியபதியாம் திருவெண்காடு.

தீவகத்தில் பிரசித்திபெற்ற திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய கொடியேற்ற நாள் ஆவணி13 ஆகும். வானளாவ உயர்ந்த அழகான இராஜகோபுரங்களுடன் மண்டைதீவில் அமைந்திருக்கின்ற இந்த சித்திவிநாயகப் பெருமான் ஆலயம் மிகவும் கீர்த்தி பெற்ற மூர்த்தி இருக்கும் புனித ஸ்தலமாகும்.

கருணைமிக்க தொல்லை வினை தீர்க்கும் சித்திவிநாயகனுக்கு பிலவ வருட மஹோற்சவம் (13.08.2021) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வேதியர்கள் பூமாரி பொழிய சர்வமங்கல வாத்தியங்கள் முழங்க ‘துவஜாரோகணம்’ எனும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.