
சாமியே சரணம் ஐயப்பா (18 படிகள் உணர்த்தும் தத்துவம்)
******முன்னுரை*****
சத்ய படிகட்டுகள் ஆகிய பதினெட்டு படிகளின் மகத்துவம், தத்துவம்,பதினெட்டு படிகளில் பக்தர்களுக்கு அருள்புரிய இறைவன் இவற்றை காணலாம்.
******மகத்துவம்******
சன்னிதானத்தை அடைந்ததும் நாம் முதலில் தரிசிப்பது 18 படிகள்.இந்த பூமியில் பிறந்த மானுடர்கள் அனைவரும் சத்ய படிகட்டுகளை பார்க்க முடியாது,தொட முடியாது,ஏறி ஐயனை தரிசிக்க முடியாது.இந்த ஒரு மண்டலம் விரதம் இருந்து உடல்,மனம்,ஆன்மா தூய்மை செய்தது இந்த சத்யா படிகட்டுகளில் ஏறி ஐயனை தரிசிக்க தான்.
பதினெட்டு படிகளில் ஏற வேண்டும் எனில் அதற்கு ஒரு அதிஷ்டம் சேர்ந்த இறை அருள் இருக்க வேண்டும்.இதை அறிந்து பொண்ணு பதினெட்டு படிகளில் ஏறி ஐயன் ஐயப்பன் அருள் முழுவதும் பெற்ற வேண்டும் என குருசாமிகள் அடிக்கடி கூறுவார்கள்.அப்படி என்ன இருக்கிறது இந்த 18 படிகளில்...? வாருங்கள் காணலாம்.