Tuesday, November 28, 2017

தர்ம சாஸ்தாவின் பதினெட்டு ( 18 ) படிகளும் உணர்த்தும் தத்துவ விளக்கங்கள் - சிறப்புக்கட்டுரை ! ! !


சாமியே சரணம் ஐயப்பா  (18 படிகள் உணர்த்தும் தத்துவம்)

******முன்னுரை*****

சத்ய படிகட்டுகள் ஆகிய பதினெட்டு படிகளின் மகத்துவம், தத்துவம்,பதினெட்டு படிகளில் பக்தர்களுக்கு அருள்புரிய இறைவன் இவற்றை காணலாம்.

******மகத்துவம்******

சன்னிதானத்தை அடைந்ததும் நாம் முதலில் தரிசிப்பது 18 படிகள்.இந்த பூமியில் பிறந்த மானுடர்கள் அனைவரும் சத்ய படிகட்டுகளை பார்க்க முடியாது,தொட முடியாது,ஏறி ஐயனை தரிசிக்க முடியாது.இந்த ஒரு மண்டலம் விரதம் இருந்து உடல்,மனம்,ஆன்மா தூய்மை செய்தது இந்த சத்யா படிகட்டுகளில் ஏறி ஐயனை தரிசிக்க தான்.

பதினெட்டு படிகளில் ஏற வேண்டும் எனில் அதற்கு ஒரு அதிஷ்டம் சேர்ந்த இறை அருள் இருக்க வேண்டும்.இதை அறிந்து பொண்ணு பதினெட்டு படிகளில் ஏறி ஐயன் ஐயப்பன் அருள் முழுவதும் பெற்ற வேண்டும் என குருசாமிகள் அடிக்கடி கூறுவார்கள்.அப்படி என்ன இருக்கிறது இந்த 18 படிகளில்...? வாருங்கள் காணலாம்.

Tuesday, November 21, 2017

திருவெண்காடு ஆனந்த புவனத்தில் ஆனந்தம் அருளும் விநாயகர் சதுர்த்தி ! ! ! 22.11.2017


விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். 

அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். 

விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.

Friday, November 17, 2017

பன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2017


சனி பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகாரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 

சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். 12 ராசிகளுக்கான பலன்கள், எந்த ராசிக்காரர்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

Friday, November 3, 2017

மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் ராஜபோக வாழ்வு கிட்டும் அன்னாபிஷேக திருநாள் ! ! ! 03.10.2017


நாம் இறைவனுக்கு செய்யும் அபிஷேகப் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அன்னத்தால் அபிஷேகம் செய்தால் ராஜபோக வாழ்வு கிட்டும் .

அன்னமாகிய அரிசி சாதம் கொண்டு சிவலிங்கத்தை மூடி அபிஷேகம் செய்வதை அன்னாபிஷேகம் என்கிறார்கள். அன்னாபிஷேகத் தின் போது, வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். ஐப்பசி பவுர்ணமி அன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும் பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான்.