![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhac4UrS3V7ATLOkXxcvr_n-3MsMvxe8gogqQQVIHkWqUham32lVhK5eSpd6HOjv_Gkv-PFV2VqHFGv10ReYUNJRa1dp-8nE499JKH4oMmmp6nv6XKnYuktuMu-s3tKqc4NJhXbphblrB0/s1600/01.jpg)
விநாயகர் முழு முதற்கடவுள் ஆவார். விநாயகர் என்ற சொல்லுக்கு ‘தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்’ என்று பொருள். விக்னங்களுக்கு அதிபதியான அவர், நாம் தொடங்கும் சுபகாரியங்களுக்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் அருளாசி புரிகிறார்.
நினைத்த காரியம், தொடங்கும் செயல்கள் எதுவாயினும் இலகுவாக முடிய, விநாயகரின் திருவருள் முக்கியமானது. அதனால் தான் எந்த ஒரு செயலையும் தொடங்கும் போது, விநாயகர் பூஜையை முதலில் செய்கின்றனர்.