Monday, November 26, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் நினைத்ததை நிறைவேற்றும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! 26.11.2018


விநாயகர் முழு முதற்கடவுள் ஆவார். விநாயகர் என்ற சொல்லுக்கு ‘தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்’ என்று பொருள். விக்னங்களுக்கு அதிபதியான அவர், நாம் தொடங்கும் சுபகாரியங்களுக்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் அருளாசி புரிகிறார்.

நினைத்த காரியம், தொடங்கும் செயல்கள் எதுவாயினும் இலகுவாக முடிய, விநாயகரின் திருவருள் முக்கியமானது. அதனால் தான் எந்த ஒரு செயலையும் தொடங்கும் போது, விநாயகர் பூஜையை முதலில் செய்கின்றனர்.

Thursday, November 22, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் காரியத்தடை நீக்கும் விநாயகர் சஷ்டி விரதம் ! ! ! 23.11.2018 - 13.12.2018


கார்த்திகை மாதத்து கிருஷ்ணபட்சப் பிரதமையில் தொடங்கி, மார்கழி மாதத்து சுக்ல பட்ச சஷ்டி வரையிலான 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதம் ‘விநாயகர் சஷ்டி விரதம்’ ஆகும். விநாயகர் சதுர்த்தியை அடுத்து, விநாயகப்பெருமானை வழிபடக்கூடிய சிறப்பு மிக்க விரதத்தில் ஒன்று இது.

இந்த விரதத்தை மிகுந்த பயபக்தியோடு கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். ஒருமுறை விக்கிரமாதித்தனின் மனைவியான இலக்கண சுந்தரி, இவ்விரதத்தைக் கடைப்பிடித்தாள். ஆணவம் மிகுதியால், இடையில் நோன்பை கைவிட்டு, கையில் கட்டியிருந்த கயிற்றை கழற்றி எறிந்தாள். அதன் விளைவாக, அவளது கணவன் விக்கிரமாதித்தனால் துரத்தப்பட்டு, காட்டிலேயே சில காலம் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டாள். பின்னர் காட்டில் இருந்தபடியே விநாயகர் சஷ்டி விரதத்தை கடைப்பிடித்து, பிரிந்த தனது கணவருடன் சேர்ந்தாள் என்பது புராணக் கதை.

Wednesday, November 21, 2018

மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் ஒளிமயமான வாழ்வு தரும் திருக்கார்த்திகைத் தீபத்திருநாள் ! ! ! 23.11.2018


நாளை மறுநாள் திருக்கார்த்திகைத் தீபத்திருநாள். இது ஒரு சிறப்பு மிக்க மகிமை பொருந்திய நல்லநாள். ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் கார்த்திகை மாதத்திலே வருகின்ற கார்த்திகை திருக்கார்த்திகை எனப்படுகிறது. இதனை நம் முன்னோர் மூன்று விதமாக அனுட்டித்து வந்திருக்கின்றார்கள்.

அதாவது சர்வாலய தீபம், குமாராலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என்று மூன்றுள்ளது. விஷ்ணு கோயில்களிலும் இடம்பெறுகின்ற திருக்கார்த்திகைத் தீபம், முருகன் கோயில்களில் நடைபெறுகின்ற திருக்கார்த்திகைத் தீபம் சகல கோயில்களில் வாழிடமான இல்லங்களிலும் இடம்பெறுகின்ற திருக்கார்த்திகைத் தீபம் என்பனவே அவையாகும்.

Tuesday, November 20, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் கடன் தொல்லை தீர்க்கும் பிரதோஷ வழிபாடு ! ! ! 20.11.2018


ளர்பிறை, தேய்பிறைகளில் வரும் திரயோதசியில் சந்தியா வேளையில் அனுசரிக்கப்படும் பிரதோஷ நாளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவனாரையும் நந்திதேவரையும் வணங்குவது வளம் சேர்க்கும்.

அதிலும் செவ்வாய் கிழமைகளில் வரும்பிரதோஷம் "ருண விமோசன பிரதோஷம்" என்று அழைக்கப்படுகிறது.

ருணம் என்றால் கடன் ஆகும்.

Sunday, November 11, 2018

மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் சந்தோஷமான வாழ்வு தரும் சதுர்த்தி விரதம் ! ! ! 11.11.2018


ந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். உலகம் போற்றும் வாழ்வு அமைய, வேழ முகத்தானை விரதமிருந்து வழிபட வேண்டும்.

‘பிள்ளையார்சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கின்றது. எனவே தான் விநாயகரை ‘ஆதி மூல கணபதி’ என்று வர்ணிக்கின்றோம். கணங்களுக்கெல்லாம் அதிபதி என்பதால் ‘கணபதி’ என்கின்றோம்.

சந்தோஷமான வாழ்வு தரும் சதுர்த்தி விரத நன்னாளில் விநாயகர் அகவலினை பாடி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானின் திருவருளை பெறுவோமாக.

Wednesday, November 7, 2018

மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் வினைகள் தீர்த்து நன்மைகள் அருளும் கந்த சஷ்டி விரதம் ! ! ! 08.11.2018 - 13.11.2018


மக்கு இஷ்டமான வாழ்க்கையைத் தருவார் கந்தபெருமான். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சஷ்டியில் விரதம் இருந்தால், சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகச் செய்வார் பார்வதிபாலன். 

சரவணப்பொய்கையில் முருகனாய் அவதரித்த சிவபாலனுக்கு ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி உகந்த நாள்.

Monday, November 5, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் மன இருள் நீக்கி வாழ்வின் துயர் தீர்க்கும் தீபத்திருநாள் ! ! 06.11.2018


டை மழைக்குப் பேர் போன ஐப்பசியின் முக்கியப் பண்டிகை தீபாவளி. ஒரு பக்கம் அடித்து வெளுக்கும் மழை, மறுபக்கம் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் தீப ஒளித் திருநாளாம் தீபாவளி. 

தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று. அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.