Thursday, June 25, 2020

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் ஆனந்த நடராஐ மூர்த்திக்கு ஆனி உத்தர திருமஞ்சனம் (மகா அபிசேகம்.) 28.06.2020


சுபமும் சுகமும் அருளும் திருவெண்காட்டில் இந்திரன் ஐராவதம் (வெள்ளை யானை) பிரம்மா விஷ்ணு சிவப்பிரியர் முதலானோர்கள்  நடாத்தும் ஆனி உத்தர  திருமஞ்சனம் (மகா அபிசேகம்.) அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணிவரை நடைபெறும்.

ஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும், என்பது அருளாளர்களின் சொல் வாக்கு. ஆனித் திருமஞ்சனத்தின்போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பேறுகள் பல பெறலாம். 

அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன் கிட்டும் என்பது இறை நம்பிக்கையாக உள்ளது. அதனால், அபிசேகத்திற்கு செல்லும்போது, நம்மாள் முடிந்த அபிசேக பொருட்களைச் கொண்டு செல்வது சிறப்பு.