Saturday, April 28, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் சித்திரா பௌர்ணமி விரத அனுஸ்டானங்கள் ! ! ! 29.04.2018


ழத்தைப் பொறுத்தவரையில் சித்திரா பௌர்மணிஅல்லது சித்திரா பூரணை தாய்மாரை வழிபடும் நாளாகும். இறந்துபோன தம்முடைய தாய்மாருக்காக விரதம் இருக்கும் வழக்கம் ஈழத்தில் பன்நெடுங்காலமாக நிலவி வருகிறது. ஆலயங்களில் பொங்கல் பொங்கி, கஞ்சி காய்ச்சி வழிபாடுகளில் ஈடுபடுவர். ஈழத் தமிழ் சமூகத்தின் தாய் வழிபாட்டுப் பண்பாடு சார்ந்த ஒரு நிகழ்வாகவும் சித்திரா பூரணை முக்கியத்துவம் பெறுகிறது.

“சித்திரைப் பாவையே உன்றன் வருகையால் தரணி செழிக்க வேண்டும்! செகமே வளம் பெற நன்மழை பெய்தென்றும் தீமைகள் நீங்க வேண்டும்”

Thursday, April 26, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் சகல காரியங்களில் வெற்றி கிடைக்க வல்ல பிரதோஷ வழிபாடு ! ! ! 27.04.2018


சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷ விரதம். பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள். ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது. பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும்.

Wednesday, April 18, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் அனைத்து வளங்களும் அள்ளி தரும் அட்சய திருதியை ! ! ! 18.04.2018



சித்திரை மாதம் அமாவாசை முடிந்து வரும் திருதியை தான் அட்சய திருதியை திருநாள். அதாவது சூரியனும், சந்திரனும் உச்சம் பெறும் மாதம் சித்திரை மாதம். அமாவாசையன்று மேஷ ராசியில் உச்சம் பெறும் சூரியன் உடன் சந்திரன் சேர்கிறார். மூன்றாவது நாளில் திருதியையன்று ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போதும் சந்திரன் அங்கும் உச்சம் பெறுகிறார். அதுபோல் சந்திரனுடன் சுக்கிரனும் இணைந்து பலம் பெறுவது அட்சய திருதியை நாளில்தான். அதனால் தான் சித்திரை மாத அமாவாசை முடிந்து வரும் அட்சய திருதியை என்றவாறு சிறப்புமிகு திருதியை நாளாக வணங்கப்படுகிறது.

Friday, April 13, 2018

மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் வசந்தத்தை அள்ளித்தரும் விளம்பி வருஷ தமிழ் சித்திரைப் புத்தாண்டு ! ! ! 2018

லங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒருமித்துக் கொண்டாடும் விழாக்களில் சித்திரைப் புத்தாண்டு மிகவும் முக்கியமானதாகும். இந்த விழாவானது சமய சம்பிரதாயங்களை உள்வாங்கியதாக அமையப்பெற்றது. தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகள் போல சிங்களவர்களின் பாரம்பரிய நிகழ்வுகளும் இதில் பறைசாற்றப்படுகின்றதை யாவரும் அறியலாம்.
வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி விளம்பி வருஷம் சித்திரை மாதம் 1ந் திகதி (14.04.2018) சனிக்கிழமை காலை 7மணிக்கு அபரபக்க திரயோதசி திதியில் உத்தட்டாதி நஷத்திரத்தின் 1ம் பாதத்தில் மேடலக்கினத்தில் சிங்க நவாம்சத்தில் சனிகால வோரையில் புதன் சூக்கும வோரையில் தாமத குணவேளையில் நஷத்திர பஷியாகிய மயில் உண்டித்தொழிலும் செய்யுங்காலத்தில் இப்புதிய விளம்பி வருஷம் பிறக்கின்றது.

Monday, April 2, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் துன்பங்களில் இருந்து விடுதலை தரவல்ல சங்கடஹர சதுர்த்தி விரதம்! ! ! 03.04.2018


ங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம். இன்று விநாயகருக்கு விரதம் அனுஷ்க்கும் முறையை பார்க்கலாம்..

சங்கடம் என்றால் துன்பம். ஹர: என்றால் அறுத்தல் அதாவது விடுதலை செய்தல். சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம்.