Monday, April 28, 2014

தெய்வங்களும் வணங்கும் தெய்வம் திருவெண்காட்டில் உறையும் தெய்வம் ! ! !

கணபதியை வணங்காது எந்தச் செயலை செய்யத் தொடங்கினாலும் அது முழுமை அடையாது; பலன் தராது என்பது சிவபெருமான் வாக்கு.
வரம் தந்த சிவனே கணபதியை வணங்காது திரிபுராசுரனை வதைக்கச் சென்றதால், அவர் ஏறிச் சென்ற தேரின் அச்சு முறிந்தது. இதனை அருணகிரியார்,
“முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம்
அச்சது பொடி செய்த அதிதீரா!’

என்று பாடுகிறார்.

Saturday, April 26, 2014

திருவெண்காட்டில் சங்கடங்கள் தீர்க்கும் சனி மஹா பிரதோஷம் (26.04.2014)

பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய சிறப்பான வழிபாடாகும். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப்பொழுதில் ஈசனை வழிபட்டோமானால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
 

பிரதோச காலமென்பது மாலை 4 மணி – 6 மணி வரையான காலமாகும். திங்கட்கிழமைப் பிரதோசம் சோமவாரப் பிரதோசம் என்றும் சனிக்கிழமைப் பிரதோசம் சனிப்பிரதோசம் என்றும் அழைக்கப்படும்.


Tuesday, April 22, 2014

திருவெண்காட்டில் ஸ்ரீ சிவகாமிசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஐ மூர்த்திக்கு சித்திரை மகாபிஷேகம் 23.04.2014

மண்டைதீவு - திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சிவகாமிசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஐ பெருமானுக்கு வருடத்தில் ஆறு அபிஷேகம் நடைபெறும்.

Saturday, April 19, 2014

திருவெண்காட்டில் சங்கட ஹர சதுர்த்தி ! ! ! (18.04.2014)


சங்கட ஹர சதுர்த்தி

---------------------------------


விநாயகரை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியைப் பெறலாம் எனக் கூறப்படுவதுண்டு."ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.



Friday, April 18, 2014

திருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக ! ! !

"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்"

திருவெண்காடு சித்தி விநாயகப்பெருமான் மெய்யடியார்களே ! ! !

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் எம் பெருமானின் திருவருள் துணைகொண்டு பஞ்சதள இராஐகோபுரத்திருப்பணி சிறப்பாக இடம் பெற்று வருகின்றமை யாவரும் அறிந்ததே !

Thursday, April 17, 2014

திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானை தினமும் வாயார மனதார பாடிப்பரவசமடைய விநாயகர் துதிகள் ! ! !


விநாயகர் துதிகள் ! ! !

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.’

“விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.’

Monday, April 14, 2014

திருவெண்காட்டில் சித்திரா பௌர்ணமி !!! (14.04.2014)

சித்திரா பௌர்ணமியின் சிறப்பு

இவ் வருடம் சித்திரை மாதத்தில் இரண்டு பௌர்ணமி திதிகள் (14.04.2014, 14.05.2014 ஆகிய திகதிகளில்)வருகின்ற நிலையில்; இரண்டாவதாக வருகின்ற பௌர்ணமியாகிய தமிழுக்கு 31 ஆம் திகதி 14.05.2014 பௌர்ணமியையே சித்திரா பௌர்ணமியாகவும், சிரார்த்த தினமாகவும் கடைப்பிடிக்குமாறு இந்து சமயப் பேரவை அறிவித்துள்ளது.

திருவெண்காட்டில் சித்திரை வருடப்பிறப்பு 14.04.2014 திங்கட்கிழமை (படங்கள்)

Saturday, April 12, 2014

திருவெண்காட்டில் பங்குனி உத்திரம் !!! (13.04.2014)


பங்குனி மாதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. மரங்கள் அனைத்தும் பூத்துக் குலுங்கி விளங்கும் மாதம் இதுவாகும். வசந்த காலம் என்று போற்றப்படும் இளவேனிற் காலத்தை வரவேற்று நிற்கும் மாதமாகும். உலகத்தை வாழவைக்கும் உழவர் பெருமக்கள் அறுவடை முடிந்து சற்று ஓய்வு கொள்ளும் மாதம் இந்த பங்குனியே ஆகும். இவ்விதம் ஓய்வு கொள்ளும் காலத்தில் பலவிதமான விழாக்களைக் கொண்டாடி மகிழ்வார்கள். அவற்றில் முதல் விழாவாகப் பங்குனி உத்திரத்தைக் கொள்ளலாம்.

திருவெண்காட்டில் மகா பிரதோஷ வழிபாடு!!! 12.04.2014


பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு வறுமை, பயம், பாவம், மரணவேதனை போன்ற தொல்லைகள் நீங்கி, நன்மைகள் பல கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்பது புராணக் கருத்தாகும். எனவே பக்தர்கள் அனைவரும் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு நன்மைகள் பெற வேண்டும்.

Thursday, April 10, 2014

திருவெண்காட்டில் உறையும் திவ்விய நாதனாம் சித்தி விநாயகரை வணங்கினால் நினைத்தது நடக்கும்


இப்போ நாம் முதலில் பிள்ளையாரைப் பத்தித் தெரிஞ்சுக்கலாமா? நாம எழுதறப்போ கூட பிள்ளையார் சுழின்னு போட்டுத் தான் எழுதுவோம், இல்லையா? பிள்ளையார் சுழி எப்படிப் போடணும்னு தெரியும் இல்லையா?2 மாதிரிப் போட்டுக் கீழே 2 கோடு போடணும். இது "ஓம்" என்னும் எழுத்தின் சுருக்கம் என்று சொல்லுவாங்க.

Friday, April 4, 2014

சுப நிகழ்ச்சிகளை செய்ய உகந்த தினம்

உத்தராயணத்தில் வரும் முதல் வளர்பிறை சப்தமி, ரத சப்தமி எனப்படும். அது சூரியனுக்கு உகந்த நன்னாளாகும். அன்றைய தினம் ஆன்மிக, யோகப் பயிற்சிகளை தொடங்குதல், வித்யாரம்பம், குலதெய்வ வழிபாடு மற்றும் இஷ்ட தெய்வ வழிபாடு என்று பல்வேறு சுப நிகழ்ச்சிகளை செய்ய மிகவும் உகந்ததாகும்.