Friday, October 30, 2015

திருவெண்காட்டில்நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்ல சங்கடஹர சதுர்த்தி (30.10.2015)


"அன்பினுக்கு இரங்கும் அருட்கடல்!..
ஐங்கரனின் திருக்கழல் சிந்தை செய்வோம்!."

விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை "வர சதுர்த்தி" என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி" என்றும் கூறுவார்கள்.

Wednesday, October 28, 2015

அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் திருநாள் ! ! ! 27.10.2015


சிதம்பரம் தில்லை சிற்றம்பலத்தில் அனுதினமும் காலை பதினோறு மணியளவில் இரத்னசபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

Saturday, October 24, 2015

திருவெண்காட்டில் ஏழ்மையை விரட்டும் பிரதோஷ வழிபாடு ! ! ! 25.10.2015


பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோச காலமென்பது மாலை 4 மணி முதல் 6 மணி வரையான காலமாகும்.

Thursday, October 22, 2015

திருவெண்காட்டில் விருப்பங்களை நிறைவேற்றும் கேதாரகௌரி விரதம் ! ! ! 22-10-2015 - 11-11-2015 சிறப்புக்கட்டுரை


சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா  விரதங்களுள் கேதாரகௌரி விரதமும் ஒன்று. ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ச தசமியில் இவ்விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. கேதார கௌரி விரதம் அம்மை கௌரியே அனுஷ்டித்த விரதம். இவ்விரத்தத்தினைப் பொதுவாக பெண்களே அனுட்டிப்பர். கன்னியர்கள் நல்ல கணவன் வேண்டியும் சுமங்கலிகள் தம் கணவருடன் இணைபிரியாது இருக்கவும் இவ்விரத்தத்தினை அனுட்டிப்பதுண்டு.

Friday, October 16, 2015

திருவெண்காட்டில் நலம் தரும் நவராத்திரி வழிபாடு ! ! ! 13.10.2015 - 22.10.2015 சிறப்புக் கட்டுரை


க்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பெளர்ணமி விரதம், நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை. சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. 

Friday, October 9, 2015

திருவெண்காட்டில் உலகிலுள்ள அனைத்து ஐீவராசிகளும் உய்வுபெற சனி மகா பிரதோஷ வழிபாடு ! ! ! 10.10.2015




லகில் உள்ள அனைத்து ஜீவன்களும் உய்வுபெற வேண்டி நஞ்சுண்டகண்டனுக்கு நன்றி செலுத்தும் வழிபாடே பிரதோஷ வழிபாடு, மற்ற பிரதோஷதை காட்டிலும் சனிக்கிழமை வரும் பிரதோஷம் மஹா பிரதோஷம் என்று அழைக்கப்படும் காரணம் பிரதோஷ நிகழ்வு நடைபெற்ற நாள் சனிக்கிழமை அதனால் மற்ற பிரதோஷ வழிபாட்டையும் விட மஹா பிரதோஷம் மிகவும் பயன் அளிப்பதாக உள்ளது.

Monday, October 5, 2015

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான (மன்மத வருஷ) வருடாந்த மகோற்சவம் - 2015 சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ! ! !


ரலாற்று சிறப்புமிக்க மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானின் (மன்மத வருஷ) வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது 20.08.2015 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் சித்தி விநாயகப்பெருமானின் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாகவும் பக்தி பூர்பவமாகவும் நடைபெற்று  இனிதே நிறைவேறியது.

Saturday, October 3, 2015

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் வரலாற்றுப் புகழ்பாடும் “ஓங்காரநாதம்” இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு 20.08.2015 ( படங்கள், வீடியோ இணைப்பு )


இந்துசமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் ஸ்ரீமத் இலங்காபுரியில் சைவத் தமிழர்கள் செறிந்து வாழும் வட மாநிலத்தின் தலை நகராம் யாழ்ப்பாணத்தின் தென் திசையில் வங்கக்கடலலைகள் தாலாட்டும் சப்த தீவுகளின் தலைத்தீவாக விளங்குவது மண்டைதீவு.

Thursday, October 1, 2015

திருவெண்காட்டில் அளவு கடந்த ஆனந்தத்தை தரவல்ல சங்கடஹர சதுர்த்தி ! ! ! 01.10.2015


ங்கடங்கள் நீக்கிடும் "சங்கடஹர சதுர்த்தி" விரதம் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தையும், சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.