![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcOAxr-RKG5RtrNy1w1OKmkZH4sjwiWpcHaU5PTNMoaHkjkYESAPBCeJElZQMoNEbWujP5UFlufJBxx2zWAEKvkRgGvAKpa4G2ogZCH1GhJkfGt-Vbh34zjWjJ-yhgR4N7FOOa6mWAeYE/s1600/gawri.jpg)
கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான விரதம் ஆகும்.
கேதார கௌரி விரதம் மேற்கொண்டே பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார் என்று கூறப்படுகிறது.
இது ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத வளர்பிறையான தசமி (விஜய தசமி) முதல் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகின்றது.