Saturday, June 29, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் துன்பங்கள் நீங்கி இன்பம் பெற பிரதோஷ வழிபாடு ! ! ! 30.06.2019


சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.

மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும்.

இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.

Thursday, June 27, 2019

ஆனி உத்தர திருமஞ்சன உற்சவ அழைப்பிதழ் - 08.07.2019


னித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்து கொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும் என்பது அருளாளர்களின் வாக்கு.

ஆனித் திருமஞ்சனம் தரிசித்தால் 
வாழ்வில் பேறுகள் பல பெறலாம்.

அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன்கள் கிட்டும் என்பது, அனைவருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை.

Thursday, June 20, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் தடைகளை நீக்கும் குரு வார சங்கடஹர சதுர்த்தி ! ! ! 20.06.2019


ங்கடஹர சதுர்த்தி நன்னாளில், கணபதியை வழிபடுவோம். கவலைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் ஆனைமுகத்தான். இன்று  குருவார சங்கடஹர சதுர்த்தி 

விநாயகப் பெருமானுக்குரிய ஒரு சிறப்பான தினமாக ஆனி சங்கடஹர சதுர்த்தி தினம் வருகிறது. இந்த ஆனி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கின்ற அற்புதமான பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Thursday, June 13, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் சுபிட்சம் அருளும் சுக்கிரவாரப் பிரதோஷம் ! ! ! 14.06.2019


சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. 14 ம் தேதி சுக்கிர வாரப் பிரதோஷம். இந்தநாளில், மாலையில் சிவ தரிசனம் செய்து, சிவனாரையும் நந்திதேவரையும் வணங்கினால், கடன் தொல்லையெல்லாம் தீரும். கவலைகளெல்லாம் பறந்தோடும் என்பது உறுதி.

சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வணங்குவோம். வழிபடுவோம். உள்ளே நுழைந்ததும் நாம் தரிசிச்க்கும் நந்திதேவவருக்கான முக்கியமான பூஜையே... பிரதோஷ பூஜை! இந்த நாளில்.. சுக்கிரவாரம் என்றும் சொல்லப்படும் வெள்ளிக்கிழமை பிரதோஷ நாளில், நந்திதேவரையும் சிவபெருமானையும் கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.