![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLWhMKQHMdD_Rt9scvU_dhIqgfDrSm-C3p8nBHTeCWbMccMHnoAjggZPE4q0T8SIS_ZD9XEP3LCRB3OBPYlcdvdsoYc-nWhZJAFEAlhycZMnovFflMya49_DfcqL314rMIHpTva9TXUTk/s1600/0.jpg)
விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை "வர சதுர்த்தி" என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி" என்றும் கூறுவார்கள்.