![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS9T6UplC2OyQrc7_0S5RvPiUVs_ljeTum8-ZzGRf50VaPG8JpTizyAkvBrvUonF7iNfpvqjhthNVxudXKNPfzAJAB57Uwf3YSB5FdJGdtZlqX8GjiUrjMfY4NQVf0KXIFXh2cW6V3vQ7K/s1600/10.jpg)
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
பொற்சபை (பொன்னம்பலம்)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0tDJn-OmPcGxmzmnKIiPBiq50LMKZtVk_jmtMXJzSQMl34RkXyHuOzVqLRYfT-97k2mIJl_fYqljtxlI7DRbHqV78nGfzwZ_9rsC4tixjtAznVwSgHRmkSMjJoO_uLI-0lkKmaQgDWjDi/s1600/amma+01.jpg)
திருவெண்காடு சுவேதாரணியம்பதி ஆதி சிதம்பரம் பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான், ஸ்ரீ பாலசுப்பிரமணியர் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்.
உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷம் நித்ய பிரதோஷம் , மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
ஸ்ரீ காசி விஸ்வநாதமூர்த்தி ஸ்ரீ காசி விசாலாட்சியம்பாள்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTf4S0lO4rCuQMH5nMSN4aENIkGDP13HeET1AWnh4IhtAZu2f0uQCAqIx3m6e_1h3hJK5wlZw6FFkdXxPsOjP4q_uU1hv01-c1pu_OwxHs_khuAiJGBauc1mUq5VQVF7BSesRN_QGYQkuq/s1600/00000000.jpg)
திருவெண்காடு சுவேதாரணியம்பதி ஆதி சிதம்பரம் பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி.
தினம் தோறும் மாலை 4.30 மணி முதல் 6. 00 மணி வரையிலான காலம் நித்ய பிரதோஷ காலம் எனப்படும். இந்த சமயத்தில் இறைவனை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும். மாதம் தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் மாதப் பிரதோஷம் எனப்படும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjojODScwvxANCK7ZiQWN3CV51XdGFJ2r5xCOAf6phnua-6qDiflLiIsRukga97KcN1Dj6AvDkUsD_4KsA4Hi1ny6Xk7gUZftTCn6KItCZZpaBSFtjBM8KQHXdhVbYY7tNESjCwJOe2gZBh/s1600/10.jpg)
மஹா பிரதோஷம் : மாதங்களில் தேய்பிறை அல்லது வளர்பிறை திரயோதசியுடன் சனிக்கிழமை கலந்து வந்தால் அது மஹா பிரதோஷம் என்று வழங்கப்படுகிறது. இவை சித்திரை வைகாசி, ஐப்பசி கார்த்திகை மாதங்களில் வந்தால் மிகவும் உத்தமம் என்று புராணங்களும் ஆகமங்களும் கூறுகின்றன.
சனி பிரதோஷம் : சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் இன்று சிறப்பாக அனைத்து சிவன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3j7NLMtb7fWUk4kuRQkVpylVLh0nMUzDAQJJdRlqSH8bi9W-Vg0yYVgI1XMggNM7EghUTV_VI03DRxyPBpr-SYwMblzAVDmFnBhyphenhyphenNmmyWQ1CIggsengmXh7ffxQ1NZNuV3jYV0UOHs9po/s1600/11.jpg)
ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjq57au015ETK2B6Ksxd2V9C5cYDMWsEFkZqvHS4HKja4bxpYUInvF4jZjCcUSeZxnldNqjUdc2oRRVE3sDdXfsteQ0pZp-MwxLpjpg3DX69ddYqef5WkBs22FsAteIT6iIYSRZSNEXVBTM/s1600/11.jpg)
ஒரு பிடி அருகம் புல்லை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால்... சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். மாலையில் நடக்கும் சிவ பூஜையில் கலந்து கொண்ட பிறகு பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம்.
பிரதோஷ தரிசனத்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். சனி பிரதோஷ நன்னாளில் பழமையான சிவன் கோவிலில் வழிபட்டு இறைவனருள் அடைவோமாக!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdRSlU-d8wjZJ1wZHOAcpLmLOshCfdhr99Uerohww_KwDh_q-dgRHPW4pJzEgGrlzibiToVwN6UQ2sX-xjmqnUn9uPaEgI2p1xMBPhruRYM3rpw8nq8WF8F40MIrrXpcZdJ-vnsB75Gb9i/s1600/1021.jpg)
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''