Friday, April 18, 2014

திருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக ! ! !

"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்"

திருவெண்காடு சித்தி விநாயகப்பெருமான் மெய்யடியார்களே ! ! !

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் எம் பெருமானின் திருவருள் துணைகொண்டு பஞ்சதள இராஐகோபுரத்திருப்பணி சிறப்பாக இடம் பெற்று வருகின்றமை யாவரும் அறிந்ததே !

சித்தி விநாயகப்பெருமானின் பஞ்சதள இராஐகோபுரத்திருப்பணி இனிதே நிறைவு பெற எம்பெருமானுக்கு நிதி பங்களிப்பு செய்ய விரும்பும் அடியவர்களுக்கான வங்கிக்கணக்கு விபரமும் தொடர்பு விபரமும் இணைத்துள்ளோம்.
மேலும் எம்பெருமானின் பஞ்சதள இராஐகோபுரத்திருப்பணி விரைவில் நிறைவு பெற உங்களால் இயன்ற ஒத்துழைப்பினையும் உதவியினையும் வழங்குமாறு அன்புரிமையுடன் வேண்டி நிற்க்கின்றோம்.
திருவெண்காடு சித்தி விநாயகப்பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றோம்.

தகவல் :
ஆலய தர்மகர்த்தாக்கள்.
மண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம்.


விபரத்தினை மேலும் தெளிவாக பார்வையிட இங்கே அழுத்தவும்.

ஓம் கம் கணபதயே நமஹ...!!