Wednesday, January 31, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் தொட்டதெல்லாம் துலங்கும் தைப்பூசத்திருநாள் ! ! ! 31.01.2018


தைப்பூசம் என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். நட்சத்திர வரிசையில், பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தைமாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பவுர்ணமியில் வரும். முருகனுக்கு உகந்த நாள்.

தைப்பூச தினம். தைமாதம் உத்தராயண காலத்தில் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும்.
சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடக ராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க, சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடன் இணைந்த பவுர்ணமியில் நிகழும். இந்தச் சிறப்பு மிக்க தினம் தான் தைப் பூச தினம்.

Saturday, January 27, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் அபூர்வ பிரதோஷம் ! ! ! 29.01.2018


108  ஆண்டுகளுக்கு  ஒரு முறை வரும் அபூர்வ பிரதோஷம்

வரும் 29.1.2018 வருடம் ஹேவிளம்பி ஆண்டு திங்கள் கிழமை வரும் பிரதோஷம் 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மிகவும் அபூர்வ பிரதோஷம். இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள் நட்சத்திரம் திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது.

Saturday, January 13, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் ஆனந்த வாழ்வளிக்கும் தைத்திருநாள் வழிபாடு ! ! ! 14.01.2018


தை மாதப் பிறப்பு இந்த முறை, ஞாயிற்றுக்கிழமை யில் வருகிறது. மாதப் பிறப்பு என்பதால் அன்றைய நாளில், தர்ப்பணம் செய்வது விசேஷம். அதேபோல், சூரிய பகவானுக்கு உரிய நாள். மேலும் அன்று பிரதோஷம். எனவே தை மாதப் பிறப்பான, ஜனவரி 14ம் தேதியை ஆத்மார்த்தமாகக் கொண்டாடி பூஜித்தால், வாழ்வில் எல்லா சத்விஷயங்களும் கிடைப்பது உறுதி.

பொதுவாகவே ஒவ்வொரு தமிழ் மாதத்தின் பிறப்பின் போதும் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். அதிலும் தை மாதம் மிக முக்கியமான மாதங்களில் ஒன்று. இந்த மாதத்தின் பிறப்பான ஜனவரி 14ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று, தர்ப்பணம் செய்து, முன்னோரை ஆராதிப்போம். பித்ருக்களின் ஆசியைப் பெறுவோம். இதனால் நாமும் நன்றாக வாழ்வோம். சிக்கல்கள் யாவும் தீரும். நம் சந்ததியினரும் சீரும்சிறப்புமாக வாழ்வார்கள்.

Friday, January 12, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம் ( 02.01.2018 ) படங்கள் இணைப்பு


மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபை பொன்னம்பலத்தில் வீற்றிருந்து ஆனந்த திருநடனம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 02.01.2018 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.

Thursday, January 4, 2018

கல்வி, செல்வம், வெற்றி போன்றவற்றுக்கு அதிபதியான மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயக பெருமானின் முழு அருளை பெற உதவும் 12 ஸ்லோகங்கள் ! ! !


ல்வி, செல்வம், வெற்றி போன்றவற்றுக்கு அதிபதியான சித்தி விநாயக பெருமானின் முழு அருளை பெற உதவும் இந்த 12 ஸ்லோகங்களை பாடிப் பலன் பெறுவோமாக !

Monday, January 1, 2018

மண்டைதீவு திருவெண்காடு பொற்சபை பொன்னம்பலத்தில் மார்கழி திருவாதிரை ஆருத்திரா தரிசனம் ! ! ! 02.01.2018


ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்

    அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன் அங்கி
    இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
    திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
    பல்லாண்டு கூறுதுமே. 
மார்கழி திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கப்படும் வழிபாடாகும். மார்கழி மாதம் தக்ஷிணாயனத்தின் கடைசி மாதமாகும். தேவர்களுக்கு இது அதிகாலைப் பொழுதாகும். இந்த காலத்தை தேவர்களுக்கு பிரம்மமுகூர்த்தம் என அழைக்கப்படும். இவ்வேளையில் தில்லையில் குடிகொண்டு அருள்புரியும் எம்பெருமான் ஆனந்தநடராஜமூர்த்தியை காண தேவர்களின் அதிபதியான இந்திரன் முதலானோர்  கூடுவதாக ஐதீகம்.