Tuesday, April 22, 2014

திருவெண்காட்டில் ஸ்ரீ சிவகாமிசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஐ மூர்த்திக்கு சித்திரை மகாபிஷேகம் 23.04.2014

மண்டைதீவு - திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சிவகாமிசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஐ பெருமானுக்கு வருடத்தில் ஆறு அபிஷேகம் நடைபெறும்.



அதாவது மூன்று நட்சத்திரத்திலும் மூன்று திதியிலும் நடைபெறும், சித்திரை மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்திலும் ஆனிமாதத்தில் உத்திரம் நட்சத்திரத்திலும் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்திலும் மற்றும் , ஆவணி, புரட்டாசி, மாசி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தசி திதியுலும்நடைபெறும்.

இந்த ஆறு அபிஷேகம்,மார்கழி மாதத்தில் அதிகாலை பூஜையும், மாசி மாதத்தில் காலைசந்தி பூஜையும், சித்திரை மாதத்தில்உச்சிகால பூஜையும், ஆனி மாதத்தில் பிரதோஷகால பூஜையும்,ஆவணி மாதத்தில் சாயங்கால பூஜையும்,புரட்டாசி மாதத்தில்அர்த்தசாம பூஜையும் நடைபெறும்.

அதன்படிநாளை (23.04.2014)புதன்கிழமை உச்சிகால பூஜையில் நடைபெறும்.

அடியார்கள் அனைவரும் மண்டைதீவு - திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயம் சென்று அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு ஸ்ரீ சிவகாமிசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஐ பெருமானின் அருட்கடாச்சத்தினை பெற்று உய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.










திருவெண்காட்டில் ஆருத்ரா தரிசனம் ! ! ! 18.12.2013 (படங்கள்)