Wednesday, May 30, 2018

ஈழமணி திருநாட்டில் கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள் ! ! !

துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் எந்த ஆலயத்திற்குச் சென்றால், என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்பதை சிறிய அளவில் இங்கே பார்க்கலாம்.

மனித வாழ்வு என்பதே இன்பமும், துன்பமும் நிறைந்தது தான். ஆனால் துன்பம் வரும்போதுதான் மனிதர்களில் பலரும் இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை. 

அந்த நம்பிக்கையை அதிகப்படுத்தும் விதமாகவே புராணங்களும் பல விஷயங்களைக் கூறுகின்றன. துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் எந்த ஆலயத்திற்குச் சென்றால், என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்பதை சிறிய அளவில் இங்கே பார்க்கலாம்.

ஆரோக்கியத்துடன் வாழ..

* திருவெண்காடு சித்திவிநாயகர் திருக்கோவில் - மண்டைதீவு - யாழ்ப்பாணம்
* செல்வச் சந்நிதி திருக்கோவில் - தொண்டமானாறு - யாழ்ப்பாணம்
* கீரிமலை நகுலேஸ்வரம் திருக்கோவில் - கீரிமலை - யாழ்ப்பாணம்
* திருக்கோணேச்சரம் திருக்கோவில் - திருகோணமலை
* மாமாங்கேதீச்சரம் திருக்கோவில் - மட்டக்களப்பு

செல்வ வளம் சேர...

* திருவெண்காடு சித்திவிநாயகர் திருக்கோவில் - மண்டைதீவு - யாழ்ப்பாணம் 
* நல்லூர் கந்தசுவாமி திருக்கோவில் - நல்லுார் - யாழ்ப்பாணம் 
* திருக்கேதீச்சரம் திருக்கோவில் - மன்னார்
* நல்லூர் கைலாசநாதர் திருக்கோவில் - நல்லுார் - யாழ்ப்பாணம் 
* சிறுப்புலம் கந்த சுவாமி திருக்கோவில் - மண்டைதீவு - யாழ்ப்பாணம் 

கல்வி வளம் பெருக...

* திருவெண்காடு சித்திவிநாயகர் திருக்கோவில் - மண்டைதீவு - யாழ்ப்பாணம்
* மாவிட்டபுரம் கந்தசுவாமி திருக்கோவில் - மாவிட்டபுரம் - யாழ்ப்பாணம்
* முன்னேச்சரம் திருக்கோவில் - சிலாபம்
* பொன்னம்பலவாணேசுவரர் திருக்கோவில் - கொழும்பு
* ஈழத்துச் சிதம்பரம் திருக்கோவில் - காரைநகர் - யாழ்ப்பாணம்

பெண்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண..

* திருவெண்காடு சித்திவிநாயகர் திருக்கோவில் - மண்டைதீவு - யாழ்ப்பாணம் 
* நாகபூசணி அம்மன் திருக்கோவில் - நயினாதீவு - யாழ்ப்பாணம்
* இனிச்சபுளியடி முருகன் திருக்கோவில் - அல்லைப்பிட்டி - யாழ்ப்பாணம்
* துர்கை அம்மன் திருக்கோவில் - தெல்லிப்பளை - யாழ்ப்பாணம்
* கண்ணகி அம்மன் திருக்கோவில் - வற்றாப்பளை முல்லைத்தீவு

ஓம் கம் கணபதயே நமஹ...!!


தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் 
வேறொன்று அறியேன் பராபரமே

"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு"

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'