சித்திவிநாயகப் பெருமான் மெய்யடியார்களே !
எதிர் வரும் புரட்டாதிமாதம் (04.09.2016) அன்று எம் பெருமானுக்கு குடமுழுக்கு நடைபெற இருப்பதனால் ஆலய திருப்பணிவேலைகளும், புதிதாக நிர்மானிக்கப்படும் பஞ்சதள இராஐகோபுர திருப்பணிகளும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
எங்கள் மண்டைதீவு பிள்ளையாருக்கு, எங்கள் சித்திவிநாயகருக்கு, எங்கள் வெண்காட்டு பெருமானுக்கு, எங்கள் குலதெய்வத்திற்கு, எங்கள் இஷ்ர தெய்வத்திற்கு, நாங்கள் எதாவது பொருள் உதவி செய்யவேண்டும் நிதி உதவி செய்யவேண்டும் என மனதார நினைத்து கொண்டிருக்கும் எம் பெருமான் மெய்யடியார்கள் விரைந்து இணைந்து செயற்படுமாறு சித்திவிநாயகப் பெருமானின் பாதரவிந்தம் பணிந்து வேண்டுகின்றோம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf8f9fYAPa9b9wMneP8z_zUyTB_AXamaTJnlEjI3qmlf7GjEnzI7cusiSsNnwjwEvpzx_6GZXwwziBCahbp9-75eMtFCd_7b6kO9rhOqdIrfTk3ULawkU-KA5UIqLjonYU3QcKTXpf0r4/s1600/01+%25281%2529.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaRTTzwnezUmrKgi1RViLEIzlrnkVKy1snG5qYigJMg20TV4kQdVWlw0f-jKCxtnKgWTlavRcS9gmHaOcgpYt3E3eh5WTQnzosh0qgZQIjGCS-aX54G_L3EiQ-4kDTNTWmFxzpNly6C7U/s1600/09.jpg)
கோபுரத்தை தரிசிப்பதே கோடிபுண்ணியம் என்றால் அக்கோபுரத்தை அமைக்கும் திருப்பணிக்கு உதவுவது எவ்வளவு பெரிய புண்ணியம்.
"எல்லாம் சித்திவிநாயகப்பெருமானின் கிருபை"
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
"திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'