Tuesday, September 10, 2013

இந்துக்களின் புனித தினமான ஆடி அமாவாசையின் சிறப்பு

இந்து சம­யத்­த­வர்­க­ளுக்கு மிகவும் புனி­தமும் சிறப்­பா­ன­து­மான தின­மாகும். ஆடி மாதத்தில் வரு­கின்ற அமா­வாசை ஆடி அமா­வாசை விரதம் எனச் சிறப்புப் பெறு­கின்­றது. வான­வியல் கணிப்பின் படி சூரி­யனும் சந்­தி­ரனும் ஒரே இரா­சியிற் கூடு­கின்ற போதுள்ள காலம் அமா­வாசை ஆகும். 




சூரி­யனைப் “பிதிர் காரகன்” என்­கி றோம். சந்­தி­ரனை “மாதுர் காரகன்” என்­கி றோம். எனவே, சூரி­யனும் சந்­தி­ரனும் எமது பிதா மாதாக்­க­ளா­கிய வழி­படும் தெய்­வங்­க­ளாகும். 

சூரிய பகவான் ஆண்மை,ஆற்றல்,வீரம் என்­ப­வற்றை எல்லாம் எமக்குத் தர­வல்­லவர். சந்­திரன் எமது மன­துக்கு அதி­ப­தி­யா­னவர். இதனால் மகிழ்ச்சி, தெளி­வான தெளிந்த அறிவு, இன்பம், உற்­சாகம் என்­ப­வற்றை எல்லாம் தர­வல்­லவர். இத்­த­கைய பெரு­மை­களை எல்லாம் தரு­கின்ற சூரிய, சந்­தி­ரனை தந்தை, தாய் இழந்­த­வர்கள் அமா­வாசை, பூரணை தினங்­களில் வழி­பாடு செய்வர். 

தை அமா­வாசை, ஆடி அமா­வாசை இரண்­டுமே பித்­ருக்­களைப் பூஜிக்கும் முக்­கிய நாட்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றன. என்ன காரணம்? சூரி­யனின் வட திசைப் பய­ண­மான உத்­த­ரா­யணம் தை மாதம் ஆரம்­ப­மா­கி­றது. தென்­திசைப் பய­ண­மான தட்­சி­ணா­யனம் ஆடி மாதம் தொடங்­கு­கி­றது. அத­னால்தான், ஆடி மற்றும் தை மாத அமா­வா­சைகள் விசே­ஷ­மா­ன­தாக விளங்­கு­கின்­றன. இந்த இரண்டு தினங்­களும் பித்­ருக்­களின் ஆசியை நமக்குப் பெற்­றுத்­தரும் அரு­மை­யான தினங்கள். ஏன்? தெரிந்தோ தெரி­யா­மலோ, வாழ்வில் நம்மை அறி­யாது பல பாவங்­க­ளுக்கு நாம் உட்­ப­டு­கிறோம். பல பிற­வி­களில் செய்த பாவங்­களும் இப்­பி­ற­வியில் நம்மை நிம்­ம­தி­யின்றி தவிக்க விடு­கின்­றன. ஆழ­மாகச் சிந்­தித்தால், நமது தவ­றுகள் நமக்குப் புரியும். 

வய­தான பெற்­றோர்­களை சரி­வர பரா­ம­ரிக்­காமல் அவர்­களை முதியோர் இல்லம் அனுப்­பு­வது... நக­ரத்தின் பழக்­கங்கள் அவர்­க­ளுக்குப் பிடிக்­காது என்று கூறி, கிரா­மத்தில் பெற்­றோரை தனியே வைக்­கி­றார்கள்... பெற்­ற­வர்­களை ஷிப்ட் முறை போல அடுத்த மக­ளிடம் அல்­லது மக­னிடம் அனுப்­பு­வது... என்ன வேதனை அந்தப் பெற்­றோர்­க­ளுக்கு! பெற்­றோரை உதா­சீ­னப்­ப­டுத்­தி­விட்டு பிற­ருக்கு கல்விச் செல­வுக்கு உத­வு­கிறேன்... கோயிலில் அன்­ன­தானம் செய்­கிறேன் என்­பதால், நம் பாவம் நீங்கி புண்­ணியம் பெரு­கி­வி­டாது. இவை அனைத்தும், இப்­பி­ற­வியில் நடை­முறை வாழ்வில் தினமும் நடப்­பதை நாமே பார்க்­கிறோம். இவற்றின் விளை­வுதான்,நமக்கு ஏற்­ப­டு­கின்ற கார­ண­மில்­லாத பிரச்­னைகள்.மனக்­கஷ்­டங்கள் 


இவற்­றுக்குப் பரி­கா­ரமே பித்­ருக்­களை பூஜிப்­பதும், குல­தெய்­வத்தை ஆரா­தனை செய்­வ­தும்தான் என சாஸ்­தி­ரங்கள் கூறு­கின்­றன. 

குடும்­பத்தில் ஓர் ஆண் வாரிசு தோன்­றி­யதும், ஆனந்­தப்­பட்டு தன்­னு­டைய பித்ரு கட­மை­களைச் செய்து தங்­களைக் கரை­யேற்­றுவான் என எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கின்­றனர். அதற்­கா­கவே ஏற்­பட்­டது பித்ரு தர்ப்­பண பூஜை. தேவ­லோக மூலி­கை­யான தர்ப்­பையைக் கொண்டு, எள் வைத்து ஜாதி, மத, பேத­மின்றி தர்ப்­பணம் செய்து மூதா­தை­யரை மகிழ்­விக்க வேண்­டி­யது ஒவ்­வொ­ரு­வரின் முக்­கியக் கட­மை­யாகும்.

திரு­வண்­ணா­ம­லையில் சிவ­பெ­ருமான் வல்­லாள மகா­ரா­ஜா­வுக்குத் தர்ப்­பணம் கொடுப்­பது வரு­டந்­தோறும் விழா­வா­கவே நடை­பெற்று வரு­கி­றது. குடந்­தையில் சார ங்க பாணிப் பெருமாள் தன் பக்­த­னுக்கு திதி கொடுக்­கிறார். தில­தர்ப்­ப­ண­பு­ரியில் ஜடா­யு­வுக்கு ஸ்ரீராமன் தர்ப்­ப­ண­ம­ளிக்­கிறார். 

செங்­கல்­பட்­டுக்கு அருகில் நென்­மேலி என்ற இடத்தில் உள்ள பெரு­மா­ளுக்கு ‘சிராத்த சம்­ரட்­சணப் பெருமாள்’ என்ற திரு­நாமம். தினமும் கோயில் குளக்­க­ரை யில் பெருமாள் எழுந்­த­ருளி மூதா­தை­ய­ருக்கு சிராத்தம் கொடுக்­கிறார். 

கொடு­முடி, பவானி,திருப்­புட்­குழி, ராமேஸ்­வரம், வேதா­ரண்யம், கன்­னி­யா­கு­மரி போன்ற இடங்­களில் ஆடி அமா­வாசை, தை அமா­வாசை தினங்­களில் விசேஷ பூஜைகள் நடை­பெறும். ‘கூடு­துறை’ எனப்­படும் ஆறுகள், கடல்கள் சங்­க­ம­மாகும் கரை­யோ­ரங்­களில் திர­ளாக மக்கள் கூடி அன்று பூஜை செய்­வது வழக்கம். 

முண்டம், தண்டம், பிண்டம் என்றே முறை­யாக பித்­ரு­பூஜை செய்யும் வழக்­கமும் உண்டு. முண்டம் என்­பது, அல­காபாத் திரி­வேணி சங்­க­மத்தில் பித்­ருக்­க ளைப் பூஜித்து, முடி களைந்து நீராடி அட்­சய வடத்தின் வேர்ப்­பா­கத்தைத் தரி­சிப்­பது. ‘தண்டம்’ என்­பது, காசி சென்று ‘பஞ்­ச­நதி சிராத்தம்’ செய்து, இறந்த முன்­னோர்­களைப் பூஜித்து கங்­கையில் நீராடி ஸ்ரீவி­சு­வ­நாதர், அன்­ன­பூ­ரணி, கால பைரவர் ஆகி ­யோரை தரி­சித்து தண்டம் சமர்ப்­பிப்­ப­தா கும். இங்கு அட்­சய வடத்தின் மத்­திம பாகத்தைத் தரி­சிக்க வேண்டும். அடுத்து ‘பிண்டம்’ கொடுப்­பது! கயையில் அட்­சய வடத்தின் நுனி பாகத்தைத் தரி­சித்து, பித்­ருக்­க­ளிடம் பூஜை செய்­தது திருப்தி தானா? குறை­களை மன்­னிக்­கவும் என வேண்டி, ஆல மரத்­த­டியில் நின்று வழி­பட்டு வர வேண்டும். 

இவ்­வாறு முறைப்­படி பூஜை செய்து பித்­ருக்­களைத் திருப்­தி­ப­டுத்­து­வதால் அவர்கள் நம்மை மனம் குளிர ஆசிர்வதிக்கின்றனர். அவர்கள் மனம் மகிழ்ந்து அளித்த நற் பலன்கள் அனைத்தும் சுவரில் எறிந்த பந்து போன்று நம்மிடம் திரும்பி வந்து சேரும். தெய்வத்தன்மை பொருந்திய பித்ருக்கள் கங்கை, அருகில் ஆடி அமாவாசை தினத் தன்று காத்து இருப்பது நம் ஐதீகம். சிரமம் பார்க்காமல் ஆடி அமாவாசை சென்று பித்ருக்களைக் கரைசேர்க்கும் பூஜையைச் செய்வது குடும்பத்துக்கு மிகவும் புண்ணி யம் சேர்க்கும்.