Monday, June 23, 2014

திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான பணியில் முதலாம் தள திருப்பணி ஆரம்பம்.

திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான பணியில் வியாழவரி வரைக்குமான  வேலைகள் நிறைவுபெற்று, இன்று(23.06.2014) திங்கள் கிழமை நண்பகல் 12.30 மணிக்கு முதலாம் தளத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத் திருப்பணி  சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்கள் நிதி உதவியுடன் திரு.ஞானலிங்கம் பரணிதரன் அவர்கள் பொறுப்பேற்று ஆரம்பித்து வைத்துள்ளார் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கெள்கின்றோம்.
ஏனைய புலம்பெயர்வாழ்  மக்கள்  அனைவரிடமிருந்தும் மற்றைய தளம்களுக்குமான திருப்பணி நிதி உதவியை அன்புரிமையுடன் நாடுகின்றோம்.