Wednesday, July 1, 2015

திருவெண்காட்டில் இறைவனுக்கு கனிகள் படைக்கும் ஆனி பவுர்ணமி திருநாள் ! ! ! 01.07.2015


பூரணை என்பது சந்திரன் முழு வட்டமாகத் தோற்றமளிக்கும் நாளாகும். பூர்ணிமா என்றும் பவுர்ணமி (பௌர்ணமி) என்றும் இந்நாள் அழைக்கப்பெறுகிறது.

தொன்மக் கதை

இந்து சமயத்தில் சந்திரன் கடவுளாகக் கருதப்படுகிறார். அவர் தட்ச குமாரிகள் இருபத்து ஏழு பேரை மணந்த போதிலும், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அதிகம் பிரியமாய் இருந்தார். அதனால் கோபம் கொண்ட தட்சன் சந்திரனின் அழகு குறைந்து மங்கிப் போகச் சாபம் கொடுத்தார். பதினைந்து கலைகளில் ஒவ்வொன்றாகக் குறைந்து இறுதிஆயில் ஒன்று மட்டும் மீதமிருக்கும் போது, சிவபெருமானை சந்தமடைந்தார் சந்திரன். சந்திரனை காக்க தனது சடாமுடியில் வைத்துக்கொண்டார், எனினும் தட்சன் சாபம் முழுவதும் தீராது, பதினைந்து நாட்கள் கலைகள் அழிந்தும், பின் பதினைந்து நாட்கள் வளர்ந்தும் வரும் என்று வரமளித்தார்.

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 மண்டைதீவு - இலங்கை


"திருவெண்காடு  சுவேதாரணியம்பதி பொன்னம்பலம் பூலோககைலாய  புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்." 

பௌர்ணமி விரதங்கள்

இந்து சமயத்திலும், அதன் பிரிவுகளான சைவ வைணவ சமயங்களிலும் பௌர்ணமி பெரிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. சில தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன.

சித்ரா பவுர்ணமி - சித்ரகுப்தனின் பிறந்தநாள்.
வைகாசி பவுர்ணமி - முருகனின் பிறந்தநாள்.
ஆனிப் பவுர்ணமி - இறைவனுக்கு கனிகளை படைக்கும்நாள்.


ஆடிப் பவுர்ணமி - திருமால் வழிபாடு
ஆவணிப் பவுர்ணமி - ஓணம், ரக்சாபந்தனம்
புரட்டாசி பவுர்ணமி - உமாமகேசுவர பூசை

ஐப்பசி பவுர்ணமிசிவபெருமானுக்கு அன்னாபிசேகம்
கார்த்திகைப் பவுர்ணமி - திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு
மார்கழிப் பவுர்ணமி - சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்

தைப் பவுர்ணமி - சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்
மாசிப் பவுர்ணமி - பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்
பங்குனிப் பவுர்ணமி - சிவபெருமான் உமையம்மை திருமண நாள்



திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பூரணையும் ஒன்று. இந்துக்களால் பூரணை சிறந்த தினமாகக் கொள்ளப்படுகிறது. அம்பிகை வழிபாடு பூரணை தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. சித்திரை மாதத்தில் வரும் பூரணை சித்திராபௌர்ணமி என அழைக்கப்படும். தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து தான தருமம் செய்வது முக்கியமானதாக விளங்குகின்றது.


மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்து யமதர்மனிடம் கொடுக்கும் பணியைச் செய்யும் சித்திரகுப்தர் அவதரித்த தினம் சித்திராபௌர்ணமி ஆகும். இத்தினத்தில் அவரை வழிபடுவதும் முக்கியமானதாக விளங்குகின்றது. அறியாமையால் மனிதர்கள் செய்யும் தவறுகள் சித்திரா பௌர்ணமி விரதத்தினால் நீங்குகின்றன என்பது நம்பிக்கை.



ஓம் கம் கணபதயே நமஹ...!!



தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

 திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''