Monday, October 10, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வெற்றி தரும் விஐய தசமி ! ! ! 10.10.2016


"கலையாத கல்வியும், குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும
குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும், கோணாத கோலும்
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும், துய்ய
நின்பாதத்தில் அன்பும், உதவிப் பெரிய தொண்டரொடு
கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலும்
மாயனது தங்கையே ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாய்...! அபிராமியே..!!"


பொருளுரை:



பாற்கடலில் உணர்நிலை உறக்கம் கொள்ளும் திருமாலின் தங்கையாய் ஆதி கடவூரில் திருக் கோவில் கொண்டு, வாழ்வின் அமுதமாய், தொண்டருக்கெல்லாம் தொண்டராய் விளங்கும் ஈசனின் ஒரு பாதி மேனி கொண்ட அபிராமித் தாயே!

என்றும் நீங்காத கல்வி, நீண்ட ஆயுள், கள்ளம் இல்லாத நட்பு, என்றும் குறையாச் செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், முயற்சிகளைக் கைவிடாத மனோபலம், (சலிப்பு வராத மனம்), அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான குணம், எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), என்றும் குன்றாச் செல்வச் செழிப்பு, துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இவையனைத்தும் என்றென்றும் நீ அருள்வாய் தாயே.


ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . ! 
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம் 

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''