Tuesday, January 31, 2017

திருவெண்காட்டில் விநாயகர் சதுர்த்தி ! ! ! 31.01.2017



தினமும் காலையில் பூசையின் போதோ வழிபாட்டின் போதோ கீழ் கண்ட விநாயகர் துதி பாடல்கள் ஏதேனும் ஒன்றை பாடி வழி பட நன்மை பயக்கும் .மிக எளிமையான இனிமையான பாடல்கள் !! 

வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.       ஒளவையார் 

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.      ஒளவையார் 

ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.      திருமூலர்

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணிமின் கனிந்து       11ஆம் திருமுறை 

பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே.   சம்பந்தர் 

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மனி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்.    கச்சியப்பர் 

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் 
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் 
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் 
காதலால் கூப்புவர் தம்கை      11ஆம் திருமுறை

ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் 
நால்வாய் ஐங்கரத்தன் ஆறு 
தரு கோட்டு அம் பிறை இதழித் தாழ் சடையன் 
தரும் ஒரு வாரணத்தின் தாள்கள் 
உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே 
இரவு பகல் உணர்வோர் சிந்தைத் 
திருகோட்டு அயன் திருமால் செல்வமும் 
ஒன்றோ என்னச் செய்யும் தேவே     அருணந்திசிவம்

எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய் 
நடக்கும் மேன்மை நமக்கு அருள் செய்திடத் 
தடக்கை ஐந்துடைத் தாழ் செவி நீள் முடிக் 
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்     சேக்கிழார்

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற்பிறந்த
தொல்லை போம் போகாத் துயரம் போம்
நல்ல குணம திகமா மருணைக் கோபுரத்துள் மேவு 
செல்வ கணபதியைக் கைதொழுதக்கால்.

திருவெண்காடு சித்தி விநாயகப் பெருமானின் திருவருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயத்திற்க்கு வருகை தந்து அவனது இஷ்ட சித்திகளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.

ஓம் கம் கணபதயே நமஹ...!!

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'