திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான பணியில் வியாழவரி வரைக்குமான வேலைகள் நிறைவுபெற்று, 23.06.2014 திங்கள் கிழமை நண்பகல் 12.30 மணியளவில் முதலாம் தளத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.
இத் திருப்பணி சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்களின் நிதி உதவியுடன் திரு.ஞானலிங்கம் பரணிதரன் அவர்கள் பொறுப்பேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான பணியில் முதலாம் தள திருப்பணி ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுவரையிலான முதலாம் தள கட்டுமான பணிகளின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
ஏனைய புலம்பெயர்வாழ் மக்கள் அனைவரிடமிருந்தும் மற்றைய தளங்களுக்கான திருப்பணி நிதி உதவியினை சித்திவிநாயகப் பெருமானின் திருவருள் துணைகொண்டு அன்புரிமையுடன் நாடுகின்றோம்.