Thursday, March 19, 2015

திருவெண்காட்டில் போதாயன அமாவாசை விரத அனுஸ்டானங்கள் ! ! ! 19.03.2015


போதாயனர் என்று ஓர் மகரிஷி. விந்திய மலைக்கு தெற்கில் வாழ்ந்ததாக புஸ்தகங்களில் காணப்படுகிறது இவரது வம்சத்தைச் சேர்த்தவர்களே போதாயன ஸூத்ரத்தைச் சேர்ந்தவர்கல் என்று அழைக்கப்படுகின்றனர்.

போதாயனரின் சீடரே ஆபஸ்தம்ப மகரிஷி என்றுகூட சொல்வதுண்டு. இந்த போதாயன ஸூத்ரத்தைச் சேர்ந்தவர்கள் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டிய    நாளே போதாயன அமாவாசை என்று கூறப்படுகிறது.


 பஞ்சாங்களில் இதை போதா அமா என்று குறிப்பிட்டிருப்பார்கள் பொதுவாக மற்றவருக்கான அமாவாசை நாளுக்கு முதல் நாள் போதாயன அமாவாசை நிகழும். இந்த போதாயன அமாவாசை முதன் முதலாக ஏற்பட்ட சரித்திரம் மஹாபாரதத்தில் காணப்படுகிறது.

மஹாபாரதத்தில்  கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சமாதானம் ஏற்படாமல் இனிமேல் யுத்தம்தான் ஒரே தீர்வு என்று தீர்மானமானவுடன் துரியோதனன் யுத்தத்தில் தனக்கே வெற்றி கிடைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டன்.


எந்த நாளில் போர் துவங்கினால் எனக்கு வெற்றி கிட்டுமோ அந்த நல்ல நாளை குறித்துத் தா என்று பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவனிடம் கேட்டான். சகாதேவனும் தர்மத்துக்கு கட்டுப்பட்டு அமாவாசை திதி நாளன்று யுத்தத்தை ஆரம்பித்தால் தாங்கள் ஸைன்யங்களுக்கு நிச்சயம் வெற்றி கிட்டும் என்று அறிவுரை சொல்கிறார்.

இதை அறிந்துகொண்ட பஞ்சபாண்டவர்கள் கவலையடைகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணரிடம் சென்று இனிமேல் என்ன செய்வது? என்று கேட்க ஸ்ரீ கிருஷ்ணரும் யோசனை செய்து அதற்கான மாற்றுவழியைக் கூறுகிறார்.

அதாவது அமாவாசைக்கு முதல் நாளில் பாண்டவர்களில் மூத்தவரான தர்ம புத்திரரை விட்டு அமாவாசையன்று செய்யப்படும் தர்ப்பணத்தை செய்யச் சொன்னார். 


தர்மபுத்திரரும் அவ்வாறே அமாவாசைக்கு முதல் நாளான சதுர்த்தசி திதியன்றே தமது முன்னோருக்கு தர்ப்பணம் செய்கிறார்.

அதைப் பார்த்து ஆச்சர்யமடைந்த சூரியனும் சந்திரனும் அடடா பாண்டவர்களின் தவறுதலாக அமாவாசையை கணித்து விட்டார்கள் போலிருக்கிறதே  நாளைதானே அமாவாசை என்ன செய்யலாம்?  நாமே இவர்களிடம் நேரில் சென்று விவரத்தை சொல்லுவோமே என்று நினைத்து சூரியனும் சந்திரனும் தர்மபுத்திரர் அமாவாசை தர்ப்பணம் செய்து கொண்டிருக்கும் இடத்துக்கு வந்து  “நாளைதானே அமாவாசை நீங்கள் இன்றே தர்ப்பணம் செய்கிறீர்களே” என்று விவரத்தைக் கேட்டனர். 


அதற்கு அங்கே பாண்டவர்களுடன் இருந்த கிருஷ்ணர் பதில் சொன்னார். “சாஸ்த்திரத்தில் அமாவாசை திதி என்பது சூரியனும் சந்திரனுமாகிய நீங்கள் இருவரும் ஒன்றாக இணையும் நாள் எனக் கூறப்பட்டுள்ளது.

 இப்போது நீங்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்துதானே இருக்கிறீர்கள் ஆகவே இன்றுதான் அமாவாசை திதி “ என்று பதில் சொன்னார். சூரியனும் சந்திரனும் செய்வதறியாது திகைத்தனர்.


ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதை ஏற்றுக்கொண்டனர். தர்மபுத்திரர் அமாவாசை தர்ப்பணம் செய்வதால் இன்றுதான் அமாவாசை என்று தவறுதலாக நம்பியதால் துரியோதனன் முதலான கௌரவர்களும் அமாவாசைக்கு முதல் நாளே பித்ரு தர்ப்பணம் செய்தனர். மேலும் அன்றே அதாவது அமாவாசைக்கு முதல் நாளே மஹாபாரத யுத்தத்தை ஆரம்பித்தனர். 

ஆகவேதான் மஹாபாரத யுத்தத்தில் துரியோதனன் சைன்யங்களுக்கு வெற்றி கிடைக்காமல் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. இந்த நிகழ்ச்சி நடந்தது முதல் அமாவாசை என்பது இரண்டு விதமாக ஆகி போதாயன அமாவாசை என்பது புதிதாக ஆரம்பமாயிற்று.


ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'