![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgObXPs8R61fn8F6fOahPkoDBZGcmv7WnZ91ncEd4zIstbKFiNR8i7d1_5iRWRbymxDCdnl2O0ZUP1QQHJRFnKezVUFuaBmDxhOx3I20JAF02vj2txN80jFKShu2wPjUa4tYY8pahwv0HRG/s1600/012.jpg)
விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.
திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மண்டைதீவு - இலங்கை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3zZPKt8KAHJPD2UbmqWHjzawPuo0b886Hdsm0JwDT00D7VNMx_39jQ7cI3bV2ZXcDwLVDN9crxUCLrBlFqLtxuEZ_uNSf9l0KZQc4OMIDpDZpjIJsBBomUHs8MlGAYyQ8ws-1uvlnpZjP/s1600/03.jpg)
"திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்."
அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள்.
சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg__qeXvx0u3OXwnfyfbZbj9peeIma6RVJf8Ud8jyi2-Scw_GSayJCzbHlzTFhRd6Pzxmr7sgIpOWtbwyr5oMfGulgTWxjGEi65K8rfj92HlHt7qnVX4xIthHpFTfzoRozCr4pr4mrhfS4g/s1600/03.jpg)
அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.
அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள்.
ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdrw2NmaLPKdHXHZUOQTtulQ7JGBfbyNXPBgv2imvUQCCAHFL9HNxoqeGJ7pT-osOfk9QOlTnvC4YnGPSv8bm7-nHamfqV39bstcKluG1PK3KKKt04_QeQ24Z_QPZoHe4kP62HBaJnVAG-/s1600/01.jpg)
அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.
விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார்.
அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLyThrbPAVcc-9GQDIhA8hyphenhyphenFjIQHOFl8_tqXXDwzpv6e9NRr5DmSOv8TlHF7yiO4uBsrSzURPjXgC0UQ2FVIE7JrKxbK34I_oK7Wc3KL-9l-iOxlml8N6wF2ltcM6tfu-9RRQTtNEHr_RT/s1600/05.jpg)
அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான்; ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார். தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.