![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYqUprr2FjofCOh94cY9yxQXkSzhyphenhyphenbpHiAivbWKJbY2KM5YuXwdbfrUIvcoix_AelUEvp9-7uRmIvCjXF9UJnx-cxp0qWCrUXMI4k0-pzB31Yg9vJA0Mvxe_kJtoNJ6XEZB15hkP2eECE/s1600/06.jpg)
இரவும் பகலும் சந்திக்கின்ற நேரத்திற்கு `உஷத் காலம்’ என்று பெயர். உஷத் காலத்தை பகற்பொழுதின் முகம் என்று சொல்வார்கள். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவியாகிய உஷா. அவளது பெயரிலேயே இது உஷத்காலம் என அழைக்கப்படுகிறது.
இதற்கு நேர் எதிராக பகலும் இரவும் சந்திக்கும் நேரம் `பிரத்யுஷத் காலம்’ எனப்படும். சூரியனின் இன்னொரு மனைவியாகிய பிரத்யுஷா இக்காலத்திற்கு அதி தேவதை என்பதால் அவள் பெயரால் இது அழைக்கப்பட்டு, இப்போது பேச்சு வழக்கில் “பிரதோஷ காலம்” என அழைக்கப்படுகிறது என்பார்கள்.
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
பொற்சபை (பொன்னம்பலம்)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirakM3xVUwytJT_9XbvK8UvjMKFi9QxaUmweA0FFLHbaIBIfAPhVtCtVNjnsDTEhh39cn668lI9xcMYfsUYX66awcreGaqW2UVh0-6f2WgXfqMvPkjRKrj6dSCn2PvbV9N7bUfJT92UZc/s1600/12033029_1633163033590407_8972551400478952627_n.jpg)
திருவெண்காடு, சுவேதாரணியம்பதி, ஆதி சிதம்பரம், பூலோககைலாய, புண்ணிய திவ்விய நாமசேஷ்திர, பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி.
பிரதோஷ வேளையை “ரஜ்னிமுகவேளை” எனவும் கூறுவர். இதற்கு `இரவின் முகம்’ என்பது பொருள். இந்த பொழுது சாயும் நேரத்திற்கு அதிதேவதையான பிரத்யுஷாவிற்கு `சாயா’ என்ற பெயரும் உண்டு. இந்த வேளையில் பகல் முழுவதும் உழைத்துக் களைத்த உயிர்கள் அவளால் ரட்சிக்கப்படுகிற காலம் என்ற பொருள்பட இந்த நேரம் `சாயரட்சை’ எனவும் அழைக்கப்படுகிறது.
தோஷம் என்றால் குற்றமுடையது என்பது பொருள். அதேநேரம், பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள். எனவே குற்றமற்ற இந்த பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
ஸ்ரீ காசி விஸ்வநாதமூர்த்தி ஸ்ரீ காசி விசாலாட்சியம்பாள்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioBhFRuGg_DB5S3hw57KatDD7SpNjCPvoC5gkBHY5UIOspcds8hbeR9qFh1u5MLkm_rz_1aWjtLAIMluJvZasMS63LumWFOXF8fZhrr3hxxr3fwyhel5NhupWzAT9vrEOsrZ-e7LT9eTs/s1600/00000000.jpg)
திருவெண்காடு, சுவேதாரணியம்பதி, பொன்னம்பலம், ஆதி சிதம்பரம், பூலோககைலாய, புண்ணிய திவ்விய நாமசேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி.
பிரதோஷம் தோன்றிய கதை :
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbACLqV8UQUtFMuBN_8jD4CeGrfJZ_oooY-WYS5v4D6X8xk3pxTJsbolG7K1zFxoSz1lez4PdTRlrYK0l3xbUFG7Gzebo4exwbYYkAMAYgK9xZfNIKbXJBUTFLv6J_hgFR9akfkYV7-ww/s1600/02.jpg)
சாகா வரம் பெறுவாதற்காக அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது வலி தாங்காத வாசுகி பாம்பு விஷத்தை கக்கியது. அச்சமயத்தில், கடலில் இருந்தும் விஷம் பொங்கியது. இப்படி பாம்பினால் கக்கப்பட்ட 'காலம்' என்ற நீல விஷமும், பாற்கடலில் பிறந்த 'ஆலம்' என்கிற கருப்பு விஷமும் சேர்ந்துகருப்புப் புயல் போல் கொடிய வெப்பமும். கடும் புகையும் கொண்டதாக மாறி உலகை வருத்தத் தொடங்கியது. விஷத்தைக் கண்டு பயந்த தேவர்கள் கயிலாயம் சென்று ஈசனிடம் முறையிட்டனர். அப்பொழுது ஈசன், தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகரும் ஆகிய 'சுந்தரர்' என்னும் அணுக்கத் தொண்டரை அனுப்பி "அவ் விஷத்தை இவ்விடம் கொண்டுவா!" என்று பணிந்தார். சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும், கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக கொண்டு வந்தார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1MV-blQG3kvhv5u_IPIwzOcILbjW9LI9zBDvKLxLohyphenhyphen0sY9IU2EQsRgxW9Q3dHDh1Zll7OYxKU1xfi5cprMkxR1K00FZ_M_VSmMRxiAxRxCRwx0aNa0xVhcJ78WxLe0x3CVRWqMGcAPM/s1600/03.jpg)
அந்த ஆலகால விஷத்தை ஒரு கணநேரத்தில் உட்கொண்டார் சிவபெருமான். இதனால் ஈரேழு உலகிற்கும் பாதிப்பு வரும் என்று கருதிய பார்வதி, விஷம் முழுவதும் சிசனின் கழுத்திலேயே தங்குமாறு செய்தால். அன்றுமுதல் ஈசன், திருநீலகண்டர் என்றழைக்கப்பட்டார். விஷம் கொண்டுவந்த 'சுந்தரர்' 'ஆலால சுந்தரர்' என்று அழைக்கப்பட்டார்.
11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidJOyAdDcJxPE6ij-q6L5yS9poeooTi-QwyjPgmEGGfNYM5AtjyQO5KyhKEH63xCjrTaqB9U8eCL6C2j9adquP3HqvgXPPAIdQDAcF0zxMDwM1wTPtNHBJpO4tVolHt-brV2KJEPuD7nc/s1600/04.jpg)
பிரதோஷ காலம் தினமும் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேகால் நாழிகையும், மறைந்த பிறகு மூன்றேகால் நாழிகையும் என மொத்தம் ஏழரை நாழிகை (3 மணி நேரம்) ஆகும். பிரதோஷ காலத்தில் ஈஸ்வரன் தன்னுள் எல்லாவற்றையும் ஒடுக்கிக் கொள்கிறார்.
வளர்பிறை, தேய்பிறையின் 13ம் நாள் திரயோதசி திதியில் மாலை நேரத்தில் பிரதோஷ தரிசனம் செய்ய வேண்டும். நந்தி தேவரின் கொம்புகளின் நடுவே தியானிப்பது சிறப்பாகும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjM65U7bROrojB8btiCKHRAPZnzO0CmeuqiQqgp-TMS4OulzcoEqM4aP_Jt74fe6KgQbxv2Jp-iPd_tYZ1CFaC282X68PA5QHAIFmlh47JmI6GSxzS4LvJykTGJHzX8PlQJ8p_soSFC3WY/s1600/05.jpg)
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
"திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'