Thursday, March 9, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியம் கிட்டும் பிரதோஷ வழிபாடு ! ! ! 10.03.2017


மசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?

நந்தியம்பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு
புந்தியில் ஞானம் சேரும் பொலிவுறு செல்வம் கூடும்
குலமுறை தழைத்தே ஓங்கும் குணம் நிறை மக்கள் சேர்வர்
சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே."

 (என்ற பாடல்  பிரதோஷ மகிமையை வலியுறுத்தும்)

பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்:

01. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

02. தயிர் - பல வளமும் உண்டாகும்

03.தேன் - இனிய சாரீரம் கிட்டும்

04. பழங்கள் - விளைச்சல் பெருகும்

05. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்

06. நெய் - முக்தி பேறு கிட்டும்

07. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்

08. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்

09. எண்ணெய் - சுகவாழ்வு

10. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்

11. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்

"அம்மை அப்பனின் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"

ஓம் கம் கணபதயே நமஹ...!!

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'