Thursday, December 4, 2014

தங்கம் பெருகிட தங்க கணபதியை வழிபடுவோம் சிறப்பு கட்டுரை ! ! !


தங்கத்தை விரும்பாத மனிதனே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் தங்கத்தின் மீது பற்று உண்டு.

வெறும் அழகு ஆபரணங்களாக மட்டுமே இல்லாமல், சேமிப்புக்குத் தகுதியான பொருள் அது. அவசர கால பொருளாதாரத் தேவைக்கும் தங்கம் பயன்படும்.

அப்படிப்பட்ட தங்கத்தைச் சேமிக்கவும், சிறுகச் சிறுக சேமித்து தங்க ஆபரணங்கள் வாங்கி அணிந்து மகிழவும் உகந்த தினம்தான் தங்க கணபதி தினம்.

பொதுவாக தங்கம் வாங்கி அணிவதற்கு திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளும், பிரதமை, பெளர்ணமி, சஷ்டி, ஏகாதசி, பஞ்சமி, தசமி ஆகிய நாட்களும் சிறப்பானவை என்கின்றன ஞானநூல்கள்.

இதுபோன்று பலன் அருளும் புண்ணிய தருணங்களை மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருந்தார்கள் நம் முன்னோர்.

முற்கால அரசர்கள் பலரும், சாஸ்திர அறிஞர்கள் அறிவுறுத்தும் இந்தத் தருணங்களில் கிரீடமும், நகைகளும் செய்து அணிந்து பலன் பெற்றிருக்கிறார்கள்.

அப்படியான ஒரு சிறப்புத் திருநாள் தான் தங்க கணபதி தினம்.

ரோகிணி நட்சத்திரம், சனிக்கிழமை, அமிர்தயோகம் மூன்றும் கூடி வரும் தினத்தையே தங்க கணபதி தினமாக அனுஷ்டித்திருக்கிறார்கள்


பல்லவி 

தங்க கணபதியை மனமாரத்துதித்தேன் 

செங்கதிரோன்  ஒளியையும் மிஞ்சும் ஒளியுடைய 

அனுபல்லவி 

தங்கும் பொருளளிக்கும் மகாலக்ஷ்மியும் 

செங்கண்மால் கேசவனும்   நேசிக்கும் மருகனை 

சரணம் 

திங்கள் பிறையணிந்த  சங்கரன் மகனை 

துங்கக்கரிமுகத்துத்தூமணியை ஐங்கரனை 

சிங்கார வடிவுடைய ஆனைமுகத்தோனை 

எங்கும் நிறைந்திருக்கும் மங்கள மூர்த்தியை 



தங்கத்துக்கும் கணபதிக்கும் என்ன சம்பந்தம்



எதிலும் முன்னோரைச் சிறப்பிப்பது நமது பண்பாடு. அந்த வகையில், உலக உயிர்களுக்கெல்லாம் முன்னவராகவும், தேவாதி தேவர்களுக்கெல்லாம் முதற்கடவுளாகவும் விளங்கும் கணபதி பெருமானுக்கு பூஜைகளில் முதலிடம் உண்டு.

அவ்விதமே, அவரின் திருப்பெயரை இந்தப் புண்ணிய தினத்துக்குச் சூட்டியதாக தகவல் உண்டு.

நிகழும் 'ஜய’ வருடம், கார்த்திகை மாதம் 20ம் நாள் (06.12.2014), மார்கழி 19ம் நாள் (03.01.2015) ஆகிய நாட்கள் தங்க கணபதி தினமாக அமைகின்றன.

இந்த தினங்களில் புதிய தங்க நகையைச் செய்யச் சொல்லி அணிந்தால், பெரும் செல்வம், செல்வாக்கு, புகழ் கூடுவதோடு, பரம்பரை பரம்பரையாகச் சேர்த்த செல்வமும் நிலைக்கும் என்பது ஐதீகம்.

மேலும், இந்தப் புண்ணிய தினங்களில், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து, 'ஓம் தங்க கணபதி வஸ்ய வஸ்ய நம’ என 108 முறை பாராயணம் செய்து, விநாயகர் கோயிலுக்குச் சென்று, கணபதியைத் துதித்து அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுங்கள்.

இதனால் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, கல்வி மேம்பாடு, ஆரோக்கியம், ஐஸ்வர்யம், புதிய முயற்சிகளில் வெற்றி, தொழிலில் லாபம் என சகல விடயங்களும் சாதகமாகும், பிரச்சனைகள் விலகி, வாழ்க்கை இனிக்கும்!

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''