Wednesday, April 13, 2016

திருவெண்காட்டில் துர்முகி வருடப் பிறப்பு - 14.04.2016

ன்மத வருடம் பங்குனி மாதம் 31 ஆம் நாள் 13.04.2016 புதன்கிழமை முன்னிரவு 6 மணி 36 நிமிடத்தில் தமிழ் வருடங்கள் அறுபதில் முப்பதாவது வருடமாகிய இப் புதுவருடம் பிறக்கின்றது. அன்று பிற்பகல் 2.36 மணிமுதல் முன்னிரவு 10.36 வரை விஷூபுண்ய காலமாகும். இக்காலத்தில் இறைவனை நோக்கி சங்கற்பம் செய்து மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து பச்சை, வெள்ளை நிறமுடைய ஆடைகள் தரித்து ஆபரணம் அணிந்து, குலதெய்வம் இஷ்ட தெய்வங்களைப் பிரார்த்தித்து, பெரியோர்கள் ஆசிபெற்று, மங்கள பொருட்களைத் தரிசித்து, பஞ்சாங்கம் வாசித்தும் மறுநாள் 14.04.2016 வியாழக்கிழமை அதிகாலையில் எழுந்து வைகறையில் சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டு, கோபூஜை செய்து பசுவுக்கு உணவளித்து தானதர்மங்கள் இயற்றி வருவது உகந்தது. எல்லோருக்கும் இப்புத்தாண்டு இன்பமாய் அமைய துவாரகா நிலையாதி திருவெண்காடு சித்தி விநாயபெருமானை பிரார்த்திக்கின்றோம்.