![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbfgmbi0RADlVIYBgQajkQ0v071_AGpz3WBRr64za1DlXMADGbgVoLve3gPFTRG360MvuOV-dHlOWXT0wfqf2nNY6ZG7DF7GCK2Zah_wn9sjx-2u4uqjwcfN5fhhQqDTRIlQATtEz5V-I/s1600/11.jpg)
ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரம் அன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபடுவார்கள். அன்றைய தினம் விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்று முருகன் கோவில்களில் விசேஷ ஆராதனைகள் நடைபெறும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEEhgcZDeEhh3nwQm3E1gGglrnpj2Vq9N6vx0_ffIQWzRWaMFR2fWltF-Mm7w7-Qo_rNO7s1C8IDHuRhVuk32ykJrfYXxfbyU6G8gP54Wg4Vwe3Jr4rQSG7IDTLC_i0zLpJ2XOO6RYC0Y/s1600/01+%25281%2529.jpg)
"திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் பரிபால மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ கஐவல்லி மகாவல்லி சமேத செந்தில்நாதர்"
பெண்கள் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் யாவரும் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5VbM7JSuZRmmiIvBxj5jumadO3bEx_bUcEjFAfQC5ighjLAyGmZbU0urIVGge5fn6eTReJSsSEPz_zpkAg04P5s-0gvioWwev9WV513UUc2DhyphenhyphenXOnY4n46Qb3Aio36siXHbuUpHOk50s/s1600/06.jpg)
கார்த்திகை நட்சத்திரத்தன்று அதிகாலையில் நதிநீராடி திருநீறு பூசி முருகனை வழிபாடு புரிய வேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தி முருக மந்திரங்கள் முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம் தியானம் கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும். இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவுண்ண வேண்டும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnmu-uVoPmdhwbIlavYE8riZ3gZZhyphenhyphene0v3Ea6YtZ_kfv8SVKLsN3wnzkIEieweIzkgQR6etPXvQXwvnmKxMIdkKxgx3ugbdiiWjweD8aura_ZD5Dn8WpRZQFzN6osh4o8avPhrqLgtoJc/s1600/05.jpg)
ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக்கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும். கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும். கிருத்திகை நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள் என்பது கருத்து. இவ்வளவு பெருமை வாய்ந்தது கிருத்திகை நட்சத்திரம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEEiF0ggDmXFIqNoGcfb93zvO05Ia-bbtiCrbSa_lCYSknZoBssm_XLhowOAAhybGTbcwGajWbEhqwIYFZzce0nIZrRfzr_gAGMJ87NsNLwh9kXT4lW3wHe_ETYv_NulGLd9BCH47xtsI/s1600/murugan.jpg)
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
"திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'