Wednesday, February 22, 2017

திருவெண்காட்டில் நலம் தரும் பிரதோஷ வழிபாடு ! ! ! 23.02.2017



பிரதோஷ வேளையில் பஞ்சபுராணம் பாடுவோம்

தேவாரம்

நங் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன் கடன்அடி யேனையும் தாங்குதல்
என் கடன்பணி செய்து கிடப்பதே.

திருவாசகம்

ஆடு கின்றலை கூத்துi யான் கழற்(கு)
அன்பிலை: என்புருகிப்
பாடு கின்றலை: பதைப்பதும் செய்கிலை
பணிகிலை: பாதமலர்
சூடுகின்றலை: சூட்டுகின் றதுமிலை:
துணையிலி பிணநெஞ்சே!
தேடுகின்றலை தெருவுதோ றலறிறை:
செய்வ தொன்ற றியேனே.

திருவிசைப்பா

ஒளிவளர் விளக்கே ! உலப்பிலா ஒன்றே !
உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே !
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !
சித்தத்துள் தித்திக்கும் தேனே !
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே !
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே ! 

திருப்பல்லாண்டு

மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து
புவனி எல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன
அடியோமுக்கு அருள்புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.

பெரிய புராணம்

உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்:
அலகில் சோதியன்: அம்பலத்து ஆடுவான்:
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.

திருப்புகழ்

தத்தன தனதன தத்தன தனதன 
தத்தன தனதன ...... தனதான 

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி 
கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக் 

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ 
கற்பகம் எனவினை ...... கடிதேகும் 

மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன் 
மற்பொரு திரள்புய ...... மதயானை 

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை 
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே 

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் 
முற்பட எழுதிய ...... முதல்வோனே 

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் 
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா 

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் 
அப்புன மதனிடை ...... இபமாகி 

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை 
அக்கண மணமருள் ...... பெருமாளே. 

கந்தபுராணம்
.
"வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்."

திருஞானசம்பந்தர் அருளியது
.
"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே."

"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"

ஓம் கம் கணபதயே நமஹ...!!

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'