Tuesday, January 6, 2015

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இடம்பெற்ற மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம் (05.01.2015) படங்கள் இணைப்பு


மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 05.01.2015 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.


 
 
 

மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி அருள்மிகு  ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை  அழகிய ஆனந்த நடராஐமூர்த்தி  திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு   பூலோக கைலாய தரிசனம்  கொடுத்தார்கள்.

"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம்போன் மேனியில் பால்வெண்ணீறும் 
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் 
மனிதப் பிறவியும் வேண்டுவதே, இந்த மாநிலத்தே!"



திருவெண்காட்டில் மார்கழி திருவாதிரை ஆருத்திரா தரிசனம் 05.01.2015 சிறப்பு கட்டுரை



ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'