
விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும். பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள்.
ஆனைமுகனான விநாயகப்பெருமானை, பல்வேறு வடிவங்களில் வழிபடலாம். இதில் 16 வகையான வடிவங்களையும், அவற்றிற்கான பலன்களையும் பார்க்கலாம்.