Friday, July 27, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் மகிமைகளும் வரலாற்றுச் சிறப்புக்களும் .. (சிறப்பு கட்டுரை .....)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில். 

திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் புகழ் பெற்று விளங்குகிறது. இத்திருத்தலம் உருவாகி 600 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த 2016ம் ஆண்டு கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஐந்து அடுக்குகள் கொண்ட அழகிய இராஐ கோபுரம், மாடங்கள் மற்றும் பெரிய மண்டபங்கள் அழகாக பிரதான சாலையில் காட்சியளிப்பது பக்தர்களிள் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. 

Tuesday, July 24, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் ஏழ்மை ஒழியவும், நோய் தீரவும் பிரதோஷ வழிபாடு ! ! ! 24.07.2018

மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய்பிறை திரயோதசி (13 ஆம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். பிரதோஷம் என்பது ஏழரை நாழிகை நேரம் மட்டும் தான்.  திரயோதசி நாளில் மாலை வேளையில் சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும் பிரதோஷ காலமாகும்.

Monday, July 16, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும் தரவல்ல விநாயகர் சதுர்த்தி விரத வழிபாடு ! ! ! 16.07.2018


விநாயகர் சதுர்த்தி விரதத்தை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள்.

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களாகிய உள்ளத்தையும் உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும்.

Tuesday, July 10, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் சிவனருள் கிட்டும் பிரதோஷ விரத வழிபாடு ! ! ! 10.07.2018


பிரதோஷ வேளையில் பஞ்சபுராணம் பாடுவோம் (பிரதோஷ வழிபாடு சிறப்பு பதிவு)

பஞ்சபுராணம் பாடுதல் என்ற வழக்கம் முற்காலத்தில் நன்றாக இருந்து வந்துள்ளது. தற்காலத்தில் அவ்வழக்கம் சில கோயில்களில் மட்டுமே உள்ளது. சமயக் குரவர்கள், திருமூலர், சேக்கிழார், திருமாளிகைத் தேவர் ஆகியோர் பாடியவை திருமுறைகள் எனப்படுகின்றன.

Monday, June 25, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் பல கோடி புண்ணியத்தை தரவல்ல பிரதோஷ வழிபாடு ! ! ! 25.06.2018


சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது. 

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

Friday, June 22, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற ஆனி உத்தர திருமஞ்சனம் ! ! ! (21.06.2018) படங்கள் இணைப்பு


ஆனி உத்தர திருமஞ்சனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபை பொன்னம்பலத்தில் வீற்றிருந்து ஆனந்த திருநடனம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 21.06.2018  அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.

Thursday, June 21, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்த புவனத்தில் ஆனந்தவாழ்வு தரும் இரத்தினசபாபதிக்கு ஆனி உத்தர திருமஞ்சனம் ! ! ! 21.06.2018


திருக்கயிலாயமே திருவெண்காடு.. திருவெண்காடே திருக்கயிலாயம் என்று கயிலாயத்துக்கு இணையாகப் போற்றப்படும் மண்டைதீவு திருவெண்காடில் நடைபெறும் ஆனி உத்தர திருமஞ்சன நன்நாளில், திருச்சிற்றம்பலத்தானை தரிசிப்போம், வணங்கிப் பிரார்த்திப்போம்.

முன்பொரு சமயம்... பிரம்ம தேவர், அந்தர்வேதி எனும் சத்தியலோகத்தில் மிகப் பெரிய யாகம் ஒன்று செய்ய முனைந்த வேளையில், தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீக்ஷிதர்கள் மூவாயிரம் பேரையும் அழைக்க, தில்லைக்கு வந்து அவர்களை வரும்படி வேண்டி கேட்டுக் கொண்டார்.

அப்போது, நாங்கள் பகல் போஜனத்திற்கே திரும்பி வந்துவிடவேண்டும். அதற்கு வேண்டிய சௌகர்யம் செய்து தருவதாக இருந்தால், நாங்கள் அனைவரும் வருகிறோம் என பிரம்மாவிடம் உறுதி கேட்டுவிட்டு, உறுதி தந்தனர்.

Friday, June 15, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் சௌபாக்கியம் அருளும் சதுர்த்தி ! ! ! 16.06.2018


* விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும்.

Thursday, May 31, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் விக்கினங்களை அகற்றி ஆன்மிக வெற்றியை தரவல்ல சங்கடஹர சதுர்த்தி ! ! ! 01.06.2018


"ஓம்" எனும் பிரணவ மந்திரம் எல்லாவற்றுக்கும் மூலமாக அமைந்துள்ளது. ‘ஓம்’ எனும் வடிவமாகவும், பிரணவ பொருளாகவும் விநாயகர் விளங்குகிறார். 

"விநாயகர்" என்றால் "தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்" என்று பொருள். விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். கணங்களின் தலைவரான கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு, வருகின்ற விக்கினங்கள், வில்லங்கங்கள், இடர்கள், இடையூறுகள் அனைத்தும் விலகி ஓடும். எனவே தான் அன்று தொட்டு இன்றுவரை அனைவரும் விநாயகர் பூஜையை முதலில் கொண்டாடி வருகிறோம்.