பஞ்ச தள இராஜ கோபுர திருப்பணி வேலைகள்


Friday, August 6, 2021

முவுலகும் போற்றி வணங்கும் முழுமுதற் கடவுள் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகன் தேவஸ்தான ‘பிலவ’ வருட மகோற்சவ சிறப்பிதழ் - 2021


உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளான சித்திவிநாயகப் பெருமான் தம்மை நினைத்து உள்ளமுருகி வணங்கி வாழும் அடியார்களுக்கு அருள்பாலிக்கும் புண்ணியபதியாம் திருவெண்காடு.

தீவகத்தில் பிரசித்திபெற்ற திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய கொடியேற்ற நாள் ஆவணி13 ஆகும். வானளாவ உயர்ந்த அழகான இராஜகோபுரங்களுடன் மண்டைதீவில் அமைந்திருக்கின்ற இந்த சித்திவிநாயகப் பெருமான் ஆலயம் மிகவும் கீர்த்தி பெற்ற மூர்த்தி இருக்கும் புனித ஸ்தலமாகும்.

கருணைமிக்க தொல்லை வினை தீர்க்கும் சித்திவிநாயகனுக்கு பிலவ வருட மஹோற்சவம் (13.08.2021) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வேதியர்கள் பூமாரி பொழிய சர்வமங்கல வாத்தியங்கள் முழங்க ‘துவஜாரோகணம்’ எனும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

Thursday, July 22, 2021

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் இன்று ஆனந்த நடராஐமூர்த்திக்கு இடம்பெற்ற ஆனி உத்தர திருமஞ்சனம் ! ! ! (15.07.2021) படங்கள் இணைப்பு

னி உத்தர திருமஞ்சனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபை பொன்னம்பலத்தில் வீற்றிருந்து ஆனந்த திருநடனம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 15.07.2021 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.

Monday, July 12, 2021

மண்டைதீ திருவெண்காடு ஆனந்த புவனத்தில் ஆனந்த நடராஐ மூர்த்திக்கு ஆனிஉத்தர திருமஞ்சன மகாபிஷேகம் 15.07.2021

 

லங்கைநாயக முதலியார் வம்சத்தினரின் நி்ர்வாகத்துக்கு உட்பட்ட மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் சிவகாமசுந்தரியம்பாள் சமேத ஆனந்த நடராஐ மூர்த்திக்கு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் நடார்த்தும் ஆனிஉத்தர திருமஞ்சன மகாபிஷேகம். எதிர்வரும் 15.07.2021 அதிகாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை

Monday, June 21, 2021

கோடி கோடியாய் நன்மை கிடைக்கும் குடும்ப முன்னேற்றமும் அதிகரிக்கும் நலம் தரும் நடராஜர் தரிசனம் திருவெண்காடு மண்டைதீவு 15.07.2021


சிவபெருமானுக்குரிய இரண்டு தரிசனங்களில் முதல் தரிசனம் ஆனி மாதத்திலும், இரண்டாவது தரிசனம் மார்கழி மாதத்திலும் நடைபெறும்.


ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரமன்று நடைபெறும் நடராஜர் அபிஷேகம் சிறப்பு வாய்ந்ததாகும். அன்றைய தினம் ஆடல் அரசனைப் பாடிப்பணிந்து வழிபட்டால், கோடி கோடியாய் நன்மை கிடைக்கும். குடும்ப முன்னேற்றமும் அதிகரிக்கும்.

Tuesday, January 26, 2021

மண்டைதீவு திருவெண்காட்டில் தொட்டதெல்லாம் துலங்கும் தைப்பூசத்திருநாள் ! ! ! 28.01.2021


"வந்தவினையும், வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே
செந்தில்நகர் சேவகா என திருநீரு
அணிவோர்க்கு மேவ வாராதே வினை..."

தைப்பூசம் வழிபாடு - சிறப்பு தகவல்கள்,

●தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

◆தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.

Tuesday, December 29, 2020

மண்டைதீவு திருவெண்காட்டில் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் ஜோதியனின் ஆருத்திரா தரிசனம் - 30.12.2020

மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 30.12.2020 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுப்பார்கள்.

Sunday, December 20, 2020

மண்டைதீவு திருவெண்காட்டில் மார்கழி திருவாதிரை ஆருத்திரா தரிசனம் 21.12.2020 சிறப்பு கட்டுரை



மார்கழி மாதத்தின் சிறப்பு

ஐயன் ஆருத்ரா தரிசனம் தந்தருளும் நாள் மார்கழித் திருவாதிரை. மார்கழி மாதத்தின் சிறப்புகளை முதலில் காண்போம். நமது மனித நாளில் காலை 4 மணி முதல் 6 மணிவரையான காலம் பிரம்ம முகூர்த்தம் என்றழைக்கப்படுகின்றது. சூரிய உதயத்திற்கு முந்தைய இந்தக் காலம் இறைவனை வணங்குவதற்கும், யோக சித்திக்கும் உகந்த நேரம் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் அதிகாலை துயிலெழுவதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வலியுறுத்தினர். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தேவர்களுடைய சூரிய உதயமான உத்தராயண காலம் தை மாதம் ஆகும் .. தேவர்களின் பிரம்ம மூர்த்தமான காலமே மார்கழி மாதம் ஆகும்.. தேவர்கள் செய்யும் ஆறு கால பூஜையின் உதய கால பூஜையே திருவாதிரை பூஜையாகும்.

Monday, December 14, 2020

மண்டைதீவு திருவெண்காட்டில் பிள்ளையார் பெருங்கதை விரத 15ம் நாள் சிறப்பு பதிவு 15.12.2020


 பிள்ளையாருக்கு மோதகத்தை படைத்து வழிபடுவர். அதற்கு ஒரு தத்துவ விளக்கம் சொல்வர்.

மோதகம் வெளியே மாவினாலும், உள்ளே சர்க்கரை, பயறு, தேங்காய் துருவல் கலந்த பூரணத்தினாலும் ஆனது.
இங்கு சர்க்கரை, பயறு, தேங்காய் துருவல் என்பன மனம், வாக்கு, காயம் என்பவற்றிக்கு உவமையாக்கப்பட்டு, மாவை உடலுக்கும், பூரணத்தை உயிருக்கும் ஒப்பிடுவர்.